பதிவு செய்த நாள்
23 ஜூலை2014
00:00
புதுடில்லி: ஜூலை 15ம் தேதி நிலவரப்படி, சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, 10,542 கோடி ரூபாயாக உள்ளது.இது, நடப்பு 2013–14ம் சர்க்கரை பருவத்திற்கு, வழங்கப்பட வேண்டிய மொத்த தொகையில், 18.5 சதவீதம் என, மத்திய உணவு அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் லோக்சபாவில் தெரிவித்தார்.
உத்தர பிரதேசம்:உள்நாட்டில், சர்க்கரை விலை சரிவடைந்துள்ளதன் காரணமாக, நடப்பு சந்தைப்படுத்தும் பருவத்தில், (அக்.,–செப்.,), சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.நடப்பு 2013–14ம் சந்தைப்படுத்தும் பருவத்தில், சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய மொத்த நிலுவை தொகை, 56,968 கோடி ரூபாயாக உள்ளது. இதில், 46,426 கோடி ரூபாய் வழங்கப்பட்டதையடுத்து, நிலுவை தொகை, 10,542 கோடி ரூபாயாக உள்ளது.
உத்தரபிரதேச மாநில சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை, அதிகபட்சமாக, 6,737 கோடி ரூபாயாக உள்ளது.இதையடுத்து, கர்நாடகா (1,836 கோடி ரூபாய்), தமிழகம் (638 கோடி ரூபாய்) மற்றும் பீகார் (425 கோடி ரூபாய்) ஆகிய மாநிலங்கள் உள்ளன என, பஸ்வான் மேலும் கூறினார்.
மதிப்பீடு:கரும்பு பயிரிடும் பரப்பு, 2 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையிலும், வரும் அக்டோபரில் துவங்கும், அடுத்த சந்தைப் பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 4 சதவீதம் அதிகரித்து, 2.53 கோடி டன்னாக இருக்கும் என, சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பான ‘இஸ்மா’ தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நடப்பு 2013–14ம் (அக்.,–செப்.,) சந்தைப்படுத்தும் பருவத்தில், சர்க்கரை உற்பத்தி, 2.43 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|