பதிவு செய்த நாள்
23 ஜூலை2014
17:29
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து ஏழாவது நாளாக உயர்வுடன் முடிந்தன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி புதிய உச்சத்தை தொட்டுள்ளன. உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், அந்நிய முதலீடுகள் அதிகரிப்பாலும், ஐடி மற்றும் வங்கி தொடர்பான பங்குகள் அதிகம் ஏற்றம் கண்டதாலும் பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 121.53 புள்ளிகள் உயர்ந்து 26,147.33- எனும் புதிய உச்சத்தை தொட்டது. தேசிய பங்குசந்தையான நிப்டி 27.90 புள்ளிகள் உயர்ந்து 7,795.75-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது நிப்டி 7,809.20 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்தது.
ஐடி நிறுவன பங்குகளான டிசிஎஸ்., 2.21 சதவீதமும், இன்போசிஸ் நிறுவன பங்குகள் 3.5 சதவீதமும், விப்ரோ நிறுவன பங்குகள் 1.9 சதவீதமும் உயர்ந்தன. இவைகள் தவிர்த்து வங்கி தொடர்பான பங்குகளான ஐசிஐசிஐ., எஸ்பிஐ., போன்ற பங்குகளும் ஏற்றம் பெற்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|