ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.24 உயர்வு ... வட மாநில வரத்து சரிவால் பூண்டு விலை இரண்டு மடங்கு உயர்வு வட மாநில வரத்து சரிவால் பூண்டு விலை இரண்டு மடங்கு உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வேளாண் சாரா தங்க நகை கடன்விதிமுறைகளை தளர்த்தியது ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2014
00:17

மும்பை: வங்கிகள், வேளாண் சாராத இதர நடவடிக்கைகளுக்கு வழங்கும் தங்க நகை அடகுக்கான, கடன் விதிமுறைகளை, ரிசர்வ் வங்கி தளர்த்திஉள்ளது.வங்கிகளின், வேளாண் சாரா தங்க நகை கடன், 1 லட்சம் ரூபாயை தாண்டக் கூடாது என, ரிசர்வ் வங்கி, முன்பு கட்டுப்பாடு விதித்திருந்தது.
‘இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும்’ என, வங்கிகள் கோரிக்கை விடுத்தன. இதைக் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி, வேளாண் சாரா தங்க நகை கடனுக்கான விதிமுறையை தளர்த்தியுள்ளது.இதன்படி, வேளாண் சாரா தங்க நகை கடன் எவ்வளவு வழங்கலாம் என்பதை, இனி சம்பந்தப்பட்ட வங்கிகளே முடிவு செய்து கொள்ளலாம்.இருப்பினும், கடனுக்கான கால வரம்பு, 12 மாதத்திற்கு மிகாமலும், நகைகளின் மதிப்பில், 75 சதவீதம் வரை மட்டுமே கடன் வழங்க வேண்டும் என, வங்கிகளை, ரிசர்வ் வங்கி, அறிவுறுத்திஉள்ளது.
குறிப்பிட்ட வங்கிகளுக்குரிசர்வ் வங்கி புதிய வரையறை:மும்பை:அதிக இடர்பாடுகள் மற்றும் குறைந்த சொத்து மதிப்பு கொண்ட குறிப்பிட்ட சில முன்னணி வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி புதிய நெறிமுறைகளை வரையறுத்துள்ளது.இதன்படி, குறைந்த சொத்து மதிப்புகளை கொண்ட வங்கிகளுக்கு, அவற்றின் இடர்பாடுகளுக்கு ஏற்ப, ஐந்து பிரிவுகளின் கீழ், அவற்றின் கூடுதல் பங்கு மூலதனத்தை, 0.20 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை உயர்த்திக் கொள்ளும் வகையில் நெறிமுறையை உருவாக்கியுள்ளது. இதன் மூலம், வங்கிகள் செயல்பாடு மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)