பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
15:21
காலக்ஸி கோர் மொபைல் போனின் அடுத்த வாரிசாக, சாம்சங் நிறுவனம் இந்தியாவில், சாம்சங் கேலக்ஸி கோர் 2 (SM-G355H) மொபைல் போனை வெளியிட்டுள்ளது. இது மத்திய நிலையில், சாம்சங் வெளியிட்டுள்ள ஸ்மார்ட் போன் ஆகும். இதில் 4.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை தரப்பட்டுள்ளது. இதன் குவாட் கோர் ப்ராசசர் வேகம் 1.2 கிகா ஹெர்ட்ஸ். ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது.சாம்சங் டச் விஸ் யூசர் இண்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இரண்டு சிம்களை இதில் பயன்படுத்தலாம். இதன் ராம் மெமரி 768 எம்.பி. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜி.பி. இதனை 64 ஜி.பி. ஆக உயர்த்திக் கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.
இந்த மொபைல் போனின் பரிமாணம் 130.2 x 67.9 x 9.8 மிமீ. எடை 138 கிராம். எல்.இ.டி. ப்ளாஷ் கொண்ட 5 எம்.பி. திறன் உடன் இயங்கும் கேமரா பின்புறமாக உள்ளது. முன்புறமாக, 0.3 எம்.பி. வி.ஜி.ஏ. கேமரா உள்ளது. 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை பி, புளுடூத் மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2000 mAh திறன் கொண்டது.
கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் கிடைக்கும் இந்த போனின் விலை ரூ.11,900. ஆன்லைன் மூலமாகவும், சாம்சங் நிறுவன விற்பனை மையங்களிலும் கிடைக்கும்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|