பதிவு செய்த நாள்
26 ஜூலை2014
23:34
சேலம்:ரம்ஜான், ஆடிப் பண்டிகை எதிரொலியாக, தமிழக வாரச் சந்தைகளில், ஆடுகளுக்கு மவுசு அதிகரித்துள்ளதால்,அதன் விலை,500 ரூபாய் முதல்,1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. திருவிழாக்கள்:ஜூலை 29ம் தேதி ரம்ஜான், ஆகஸ்ட், 3ம் தேதி ஆடிப் பெருக்கு மற்றும் ஆடி மாதத்தில், மாரியம்மன் கோவில் திருவிழாக்கள்கொண்டாடப் படுகின்றன.தமிழகத்தில், தொடர்ந்து பண்டிகை நாட்கள் வருவதால், ஆடுகளின் தேவை அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் இருந்து தமிழக வாரச் சந்தைகளுக்கு, விற்பனைக்கு வந்து கொண்டு இருந்த ஆடுகளின் வரத்து சரிவடைந்துள்ளது. இதன் காரணமாக, அனைத்து ரக ஆடுகளின் விலையும், 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
10 கிலோ எடை கொண்ட செம்மறி ஆடு, கடந்த வாரம், 4,200 ரூபாய்க்கும், வெள்ளாடு, 4,800 ரூபாய்க்கும் விற்பனையானது.தற்போது, இவற்றின் விலை முறையே, 4,800 ரூபாய் மற்றும் 5,500 ரூபாய் என்றளவில் அதிகரித்துள்ளது.
ஆட்டுக்கறி:ஆடு விலை உயர்வை அடுத்து, ஆட்டுக்கறி விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு, வியாபாரிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், ஆடுகளின் விலை மேலும் உயரும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|