பதிவு செய்த நாள்
29 ஜூலை2014
01:52
புதுடில்லி :நடப்பு ஜூலை 1 – 25ம் தேதி வரையிலான காலத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீடு, 30,995 கோடி ரூபாயை (500 கோடி டாலர்) எட்டியுள்ளது.இதில், நிறுவனங்களின் பங்குகளில், நிகர அளவில், 13,166 கோடியும், கடன்பத்திரங்களில், 17,829 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டு உள்ளன.மத்திய அரசு, அன்னிய முதலீடுகளை அதிகளவில் கவரும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, காப்பீட்டு துறையில், அன்னிய நேரடி முதலீட்டை, 49 சதவீதமாக உயர்த்த, மத்திய அமைச்சரவை குழு அண்மையில் அனுமதி வழங்கியது.இதன் மூலம், 25 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய முதலீடு ஈர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இது போன்றவற்றால், அன்னிய முதலீட்டாளர்கள், இந்தியாவில் முதலீடு மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நடப்பாண்டில் இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள், மூலதனச் சந்தையில், நிகர அளவில், 1.53 லட்சம் கோடி ரூபாயை (2,550 கோடி டாலர்) முதலீடு மேற்கொண்டுள்ளன.இதில், 72,961 கோடி ரூபாயை பங்குகளிலும், 80,663 கோடி ரூபாயை கடன்பத்திர சந்தையிலும் முதலீடு செய்துள்ளன.அன்னிய நிதி நிறுவனங்கள், 1991ம் ஆண்டிலிருந்து, இதுவரையிலுமாக, இந்தியாவில் மேற்கொண்ட முதலீடு, நிகர அளவில், 19,600 கோடி டாலரை எட்டியுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|