பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
23:31
புதுடில்லி: இந்திய மிளகு இறக்குமதிக்கு, சவுதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்டில் தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் மிளகில், அளவிற்கதிகமாக, பூச்சிகொல்லி மருந்து இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, இந்தியாவின் அனைத்து வகையான மிளகு இறக்குமதிக்கும், சவுதி அரேபியா தற்காலிக தடை விதித்துள்ளது. இது, மே மாதம் 30ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.மேலும், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சில உருளைக்கிழங்கு பெட்டகங்களில், பூச்சி தொற்று இருப்பதை ரஷ்யா கண்டறிந்துள்ளது.இதையடுத்து, அதன் இறக்குமதிக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என, ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|