பதிவு செய்த நாள்
04 ஆக2014
06:53
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின், முதல் இரண்டு மாத காலத்தில் (ஏப்., - மே), தொலைத்தொடர்பு துறையில் மேற்கொள்ளப்பட்ட அன்னிய நேரடி முதலீடு, 9,000 கோடி ரூபாயாக (150 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 5,400 கோடி ரூபாயாக (90 லட்சம் டாலர்) மிகவும் குறைந்து காணப்பட்டது என, தொழிற்கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு துறையில், அன்னிய முதலீடு சிறப்பான அளவில் உயர்ந்துள்ளதையடுத்து, மதிப்பீட்டு காலத்தில் ஈர்க்கப்பட்ட ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு, 34 சதவீதம் அதிகரித்து, 530 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது. கணக்கீட்டு காலத்தில், மேற்கண்ட துறை தவிர்த்து, சேவை, மருந்து மற்றும் மின்சாரம் ஆகிய துறைகளும், குறிப்பிடத்தக்க அளவிற்கு அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளன.இந்தியாவில் அதிகளவு அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொண்டதில், மொரீஷியஸ், 228 கோடி டாலருடன் முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, சிங்கப்பூர் (98 கோடி டாலர்), இங்கிலாந்து (54 கோடி டாலர்) மற்றும் ஜப்பான் (32 கோடி டாலர்) ஆகிய நாடுகள் உள்ளன.கடந்த, 2013 - 14 மற்றும் 2012 - 13ம் நிதியாண்டுகளில், நம் நாடு ஈர்த்த ஒட்டுமொத்த அன்னிய நேரடி முதலீடு, முறையே, 2,429 கோடி டாலர் மற்றும் 2,242 கோடி டாலர் என்ற அளவில் இருந்தன.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|