பதிவு செய்த நாள்
05 ஆக2014
06:26
ஊட்டி: நீலகிரி தேயிலை துாளை வாங்க, ஏற்றுமதி வர்த்தகர்கள் ஆர்வம் காட்டாததால், பல கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் விளைவாக, பசுந்தேயிலை விலை நாளுக்கு நாள் வீழ்ச்சி கண்டு வருகிறது.ஆர்வம் இல்லைநீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள், ரஷ்யா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.சமீப காலமாக, நீலகிரி தேயிலை கொள்முதலில் ஏற்றுமதி வர்த்தகர்கள் அதிகம் ஆர்வம் காட்டாமல், கென்யா, இலங்கை நாடுகளில் இருந்து அதிகளவு தேயிலை துாளை கொள்முதல் செய்கின்றனர்.
குன்னுார் தேயிலை ஏல மையத்தில், தேயிலை துாள் ஏல விலை கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக ஏலத்தில் விற்கப்பட்ட ஒரு கிலோ தேயிலை துாளின் சராசரி விலை, 66.71 ரூபாயாக சரிவடைந்துள்ளது. கடந்தாண்டின் இதே காலத்தில், இதன் சராசரி விலை, 85.54 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.ஏலத்தில் விற்கப்படும் தேயிலை துாளின் விலையை அடிப்படையாக வைத்து தான், விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கான விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.வாரந்தோறும் ஏலத்துக்கு வரும் தேயிலை துாளில், 40 சதவீதத்திற்கு மேல் தேக்கமடைகிறது.
கடந்த நான்கு வாரங்கள் நடந்த ஏலத்தில், முறையே 3.46 கோடி ரூபாய், 3.66, 8.84, 5.20 கோடி ரூபாய் என, கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 20 கோடி ரூபாய் மதிப்பிலான தேயிலை துாள் தேக்கமடைந்துள்ளது.மறு ஏலம்அந்த தேயிலை துாள், அடுத்தடுத்து வரும் ஏலத்தில் விற்கப்படுகிறது. மறு ஏலத்துக்கு வரும் தேயிலை துாளை, வர்த்தகர்கள் கூடுதல் விலை கொடுத்து வாங்குவதில்லை.எனவே, நீலகிரி தேயிலைக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சந்தையை மேம்படுத்தினால் மட்டுமே, நீலகிரி தேயிலை தொழிலின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|