பதிவு செய்த நாள்
05 ஆக2014
06:27
புதுடில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில் (ஏப்., – ஜூலை), நாட்டின் யூரியா இறக்குமதி, 18 சதவீதம் சரிவடைந்து, 16.65 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.கடந்தாண்டின் இதே காலத்தில், யூரியா இறக்குமதி, 20.30 லட்சம் டன்னாக அதிகரித்து காணப்பட்டது. பயிரிடும் பரப்பு சரிவடைந்தது மற்றும் பருவமழை சராசரிக்கும் குறைவாகவே இருக்கும் என்ற மதிப்பீடு போன்றவற்றால், நடப்பாண்டில் யூரியா இறக்குமதி சரிவை கண்டுள்ளது.ஜூலை 25ம் தேதி நிலவரப்படி, கரீப் பருவ சாகுபடி பரப்பு, 27 சதவீதம் சரிவடைந்து, 5.33 கோடி ஹெக்டேராக வீழ்ச்சி கண்டுள்ளது. உள்நாட்டில் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு உற்பத்தி இல்லாததால், யூரியாவை, அரசின் முகமை அமைப்புகளான, இந்தியன் பொட்டாஷ், எம்.எம்.டி.சி மற்றும் எஸ்.டி.சி., ஆகிய மூன்று நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன.உள்நாட்டில் யூரியாவிற்கான தேவை, ஆண்டுக்கு, 3 கோடி டன்னாக உள்ள நிலையில், அதன் உற்பத்தி, 2.20 கோடி டன் அளவிற்கே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|