பதிவு செய்த நாள்
05 ஆக2014
06:28
புதுடில்லி,:பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், சென்ற ஜூலை மாதத்தில், 3.31 கோடி டன் நிலக்கரிஉற்பத்தி செய்துள்ளது.இது, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 3.58 கோடி டன்னை காட்டிலும் குறைவாகும்.இதே மாதத்தில், இந்நிறுவனத்தின் நிலக்கரி விற்பனையும், இலக்கை (4.04 கோடி டன்) விட, 24 லட்சம் டன் குறைந்து, 3.80 கோடி டன்னாக சரிவடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் நான்கு மாத காலத்தில், (ஏப்., – ஜூலை), இந்நிறுவனம், 14.88 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், 14.13 கோடி டன் அளவிற்கே உற்பத்தி செய்துள்ளது.
இதே காலத்தில், இந்நிறுவனத்தின் நிலக்கரி விற்பனையும், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (17.14 கோடி டன்) காட்டிலும், 15.76 கோடி டன் என்ற அளவில் குறைவாக உள்ளது.உள்நாட்டில் நிலக்கரி உற்பத்தியில், கோல் இந்தியாவின் பங்களிப்பு, 80 சதவீதமாக உள்ளது.நடப்பு நிதியாண்டில், இந்நிறுவனத்தின் உற்பத்தி இலக்கு, 50.70 கோடி டன்னாகவும், விற்பனை இலக்கு, 52 கோடி டன்னாகவும் உள்ளது.மேற்கண்ட இலக்கை எட்டும் வகையில், உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை முடுக்கி விடுமாறு, கோல் இந்தியாவை, மத்திய நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சர் பியூஸ் கோயல் கேட்டு கொண்டுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|