பதிவு செய்த நாள்
05 ஆக2014
17:07
மும்பை : தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன. ரிசர்வ் வங்கியின் கடன் வெளியீட்டு கொள்கையில் வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாத காரணத்தினாலும், வங்கிகளுக்கு கூடுதல் கடன் வசதி பெற வழிவகை செய்ததாலும் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
முன்னதாக இன்றைய வர்த்தகநேர துவக்கத்தின் போது பங்குசந்தைகள் உயர்வுடன் துவங்கின. பின்னர் சற்று சரிந்த பங்குசந்தைகள், முக்கிய நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதால் பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவின் போது மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 184.85 புள்ளிகள் உயர்ந்து 25,908.01-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 62.90 புள்ளிகள் உயர்ந்து 7,746.55-ஆகவும் முடிந்தன.
சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 20 நிறுவன பங்குகள் விலை உயர்ந்தும், 10 நிறுவன பங்குகள் விலை சரிந்தும் முடிந்தன. குறிப்பாக இன்றைய வர்த்தகத்தில் மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, பஜாஜ் ஆட்டோ நிறுவன பங்குகள் உயர்ந்தும், ஐசிஐசிஐ., எல்அண்ட்டி., ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|