பதிவு செய்த நாள்
07 ஆக2014
01:27
புதுடில்லி:அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்.ஐ.பி.பீ.,), 1,528 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி, மருந்து நிறுவனமான லாரஸ் லேப்ஸ், 600 கோடி ரூபாய் முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோல்டன் அக்ரி ரிசோர்சஸ் (இந்தியா), அக்மி மற்றும் சின்கிளாரிஸ் ஓட்டல்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் முறையே, 486 கோடி, 275 கோடி மற்றும் 41 கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.அதேசமயம், அகிலண்ட் டெக்னாலஜீஸ், கிறிஸ்டின் காமர்மோன்ட்மார்கோட்டின், எச்.எல்.ஜி., எண்டர்பிரைசஸ், ஜிஸ்டாட் ஓட்டல்ஸ் உள்ளிட்ட ஏழு திட்டங்களுக்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இவை தவிர, ஏழு திட்டங்களுக்கான அனுமதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது என, எப்.ஐ.பி.பீ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|