14 அன்னிய  நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி14 அன்னிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதி ... புண்ணாக்கு ஏற்றுமதி 37 சதவீதம் சரிவடைந்தது புண்ணாக்கு ஏற்றுமதி 37 சதவீதம் சரிவடைந்தது ...
வர்த்தகம் » ஜவுளி
நுால் விலை உயர்வால் ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
01:29

கரூர்,: ஜவுளி உற்பத்தி அதிகரித்துள்ள நேரத்தில், நுால் விலை கட்டுக்கு, 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.கரூர் மாவட்டத்தில், ஸ்கிரீன், தலையணை உறைகள், மேஜை விரிப்பு, கைக்குட்டை, சோபா விரிப்பு, துண்டு ஆகியவை உற்பத்தி செய்யப்படுகிறது.வேலைவாய்ப்புவிவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் தொழிலாக, ஜவுளி உற்பத்தி உள்ளது. ஜவுளித் தொழில் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும், ஆயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில், வீட்டு உபயோக ஜவுளி பொருள் தயாரிக்க, மோட்டா ரகம் நுால்களான, 2க்கு 6, 2க்கு 20, எஸ் முதல், இரண்டாம் எண் நுால்கள் பயன்படுத்தப்படுகின்றன.பண்டிகை காலம் நெருங்குவதால், புதிய ஆர்டர்களை, ஜவுளி உற்பத்தியாளர்கள் பெறத் துவங்கி உள்ளனர். நுால் விலை ஏற்றத்தாழ்வு காரணமாக, புதிய ஆர்டர் பெறுவதும், வாங்கிய ஆர்டர்களை, நிர்ணயித்த விலையில் உற்பத்தி செய்வதும் சிக்கலாகியுள்ளது.ஏற்கனவே, 620 ரூபாய்க்கு விற்கப்பட்ட, 2க்கு 6 ரக நுால் கட்டு, 650 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஒரு கட்டு நுாலுக்கு, 30 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால், ஏற்கனவே பெறப்பட்ட ஆர்டர் உற்பத்தி செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்ற இறக்கம்:கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறியதாவது:கரூர் ஜவுளி ஏற்றுமதியாளர்களுக்கு, கடந்த சில மாதங்களாக, ‘ஆர்டர்’ கிடைக்கவில்லை. ‘ஆர்டர்’ இல்லாமல், உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்போது, தமிழகம் மற்றும் வட மாநிலங்களில், பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு, வீட்டு உபயோக பொருள் ஜவுளி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். ஜவுளி உற்பத்தி அதிகரிக்கும் நேரத்தில், நுால் விலை திடீரென கட்டுக்கு, 20 ரூபாய் முதல், 30 ரூபாய் வரை, உயர்ந்துள்ளது.
நுால் விலையை பொருத்தவரை, கடந்த சில வாரங்களாக ஏறுவதும், இறங்குவதுமாக உள்ளது. நுால் விலை ஏற்றத்தாழ்வு காரணமாக, நிலையாக ஜவுளி உற்பத்தி செய்ய முடியாத சூழ்நிலை உள்ளது. நுால் விலையை சீராக வைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)