சரிவிலிருந்து மீண்டது ரூபாயின் மதிப்புசரிவிலிருந்து மீண்டது ரூபாயின் மதிப்பு ... தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.192 உயர்வு தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.192 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
24 மணி நேர பழுது நீக்கும் சேவை - ஸ்கோடா கார் நிறுவனம் நீட்டிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
10:48

செக் குடியரசு நாட்டை, தலைமையகமாக கொண்டு செயல்படும் ஸ்கோடா கார் நிறுவனம், வோல்ஸ்வாகன் குழுமத்தை சேர்ந்தது. இந்தியாவில், இந்த நிறுவனம், 2001 நவம்பர் முதல், ‘ஸ்கோடா ஆட்டோ இந்தியா’ என்ற பெயரில், கார் உற்பத்தி மற்றும் விற்பனையை துவக்கியது.
மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்கபாத்தில், இந்நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. ‘சூப்பர்ப், ஆக்டோவியா, பாபியா, யெடி, ரேபிட்’ என, ஐந்து மாடல் கார்களை, இந்நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.
இந்த நிறுவனத்தின், புதிய கார்களுக்கு மட்டும், 24 மணி நேர ‘ரோட்சைட் அசிஸ்டென்ட் பிரோகிராம்’ என்ற, கார் பழுது நீக்கும் சேவை அளிக்கப்பட்டு வந்தது. ஆகஸ்ட், 1ம் தேதி முதல், இந்த சேவை அனைத்து, ஸ்கோடா கார்களுக்கும் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் எந்த பகுதியில் இருந்து தொடர்பு கொண்டாலும், அருகில் உள்ள இந்நிறுவனத்தின், ஒர்க் ஷாப்பில் இருந்து உதவிக்கு ஆட்கள் வருவார்கள்.
சாலையில் சென்று கொண்டு இருக்கும் போது, காரில் திடீரென ஏற்படும் சிறிய பழுது நீக்கம்; பேட்டரி பழுது நீக்கம்; பெட்ரோல் மற்றும் டீசல் டெலிவரி; டயர் மாற்றம்; கார் சாவி தொலைந்து விட்டால், மாற்று சாவிக்கு ஏற்பாடு; காரில் பெரிய அளவில் பழுது ஏற்பட்டு, ‘டோ’ செய்து, காரை எடுத்து செல்லுதல்; அவசர தகவல் பரிமாற்றம்; டாக்சி கார் ஏற்பாடு உள்ளிட்ட சேவைகள், இந்த திட்டத்தின் கீழ் அளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில்சேர, கட்டணம் உண்டு. கார் வாங்கி ஐந்து ஆண்டுக்குள் இருந்தால், 3,233 ரூபாய்; ஐந்து ஆண்டுகளுக்கு மேல், 4,233 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் சேர, நாடு முழுவதும் உள்ள ஸ்கோடா கார் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலரை அணுகலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)