‘நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி5.7 சத­வீ­த­மாக உயரும்’‘நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி5.7 சத­வீ­த­மாக உயரும்’ ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.14 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.61.14 ...
சூரிய சக்தி மின் உற்­பத்­தியை அதி­க­ரிக்க தீவிர நட­வ­டிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2014
04:18

மத்­திய அரசு, உள்­நாட்டில், சூரிய சக்தி மின் உற்­பத்­தியை அதி­க­ரிக்கும் வகையில், முதற்­கட்­ட­மாக, விரைவில், ஐந்து மாநி­லங்­க­ளுடன் ஒப்­பந்தம் மேற்­கொள்ள உள்­ளது.ராஜஸ்தான்:இதன்­படி, ஆந்­திரா, தெலுங்­கானா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் மத்­திய பிர­தேச மாநி­லங்­களில், தலா, 500 மெகாவாட் திற­னுக்கும் மேற்­பட்ட, மெகா சூரிய சக்தி மின் திட்­டங்­கள் செயல்­ப­டுத்தப்பட உள்­ளது.
இதற்கு தேவை­யான உத­வி­களை, மத்­திய அரசு வழங்கும்.குறிப்­பாக, மத்­திய பிர­தே­சத்தில், 750 முதல் 800 மெகாவாட் திறனில், சூரிய சக்தி மின் உற்­பத்தி திட்­டங்­களை செயல்­ப­டுத்த, இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. நடப்­பாண்டு, ஜன­வரி 31ம் தேதி நில­வ­ரப்­படி, இம்­மா­நி­லத்தில், இவ்­வ­கை­யி­லான மின் உற்­பத்தி திறன், 195 மெகா­வாட்­டாக உள்­ளது.ராஜஸ்தான் மாநி­லத்தில், அதி­க­பட்­ச­மாக, 4,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் உற்­பத்தி திட்­டங்­களை செயல்­ப­டுத்த, மத்திய அரசு திட்­ட­மி­ட்டு உள்­ளது. இம்­மா­நி­லத்தின் சூரிய சக்தி மின் உற்­பத்தி திறன், 667 மெகாவாட் என்ற அளவில் உள்­ளது.இதே போன்று, ஆந்­தி­ரா­விலும், இவ்­வ­கை­யி­லான மின் உற்­பத்தி திறனை, 93 மெகா­வாட்­டி­லி­ருந்து, 1,000 மெகா­வாட்­டாக அதி­க­ரிக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.இவ்­வ­கையில், உற்­பத்தி செய்­யப்­படும் ஒரு யூனிட் மின்­சா­ரத்­திற்­கான கட்­டணம், 5.50 ரூபாய் – 5.40 ரூபாய் வரையில் இருக்­கலாம் என, உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.சூரிய சக்தி மூலம் உற்­பத்தி செய்­யப்­படும் மின்­சா­ரத்தை, பய­னீட்­டா­ளர்­க­ளுக்கு விற்­பனை செய்யும் பணி­களை, சோலார் எனர்ஜி கார்ப்­ப­ரேஷன் (எஸ்.இ.சி.ஐ.,) மேற்­கொள்ளும்.
இது­கு­றித்து, புதிய மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி அமைச்­சகத்தின் இணை செயலர் தருண் கபூர் கூறி­ய­தா­வது:நரேந்­திர மோடி தலை­மை­யி­லான புதிய அரசு, சூரிய சக்தி மின் உற்­பத்­தியை அதி­க­ரிக்க, தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. இதற்­கான, முன்­மு­யற்­சிகள், பட்­ஜெட்டில் அறி­விப்­பி­லேயே இடம்பெற்­றுள்­ளன.உள்­நாட்டில், சாத்­தி­யக்­கூ­றுகள் உள்ள மூலை முடுக்­கெல்லாம், சூரிய சக்தி மின் உற்­பத்தி மெகா திட்­டங்கள் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது.இவ்­வாறு, அவர் கூறினார்.பிர­தமர் அலு­வ­லகம்:மாசற்ற எரி­சக்தி உற்­பத்­தியை அதி­க­ரிக்கும் நோக்கில், எரி­சக்தி மற்றும் உள்­கட்­ட­மைப்பு துறை­களை சார்ந்த முக்­கிய அதி­கா­ரி­களை, ஒவ்­வொரு மாதமும் சந்­திக்க, பிர­தமர் அலு­வ­லகம் முடிவு செய்­துள்­ளது.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)