பதிவு செய்த நாள்
08 ஆக2014
10:29
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவில் இருக்கின்றன. அதிலும் வர்த்தக வாரத்தின் கடைசிநாளான இன்று(ஆகஸ்ட் 8ம் தேதி) துவக்கத்திலேயே பெரும் சரிவை சந்தித்தன. ஈராக் மற்றும் ரஷ்யா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக உலகளவில் பங்குசந்தைகளில் சுணக்கம் காணப்படுகிறது. அதன் தாக்கம் இந்திய பங்குசந்தைகளிலும் எதிரொலிக்கிறது. இதனால் இந்திய பங்குசந்தைகள் சரிவில் இருக்கின்றன.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 274.28 புள்ளிகள் சரிந்து 25,314.73 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையான நிப்டி 83.35 புள்ளிகள் சரிந்து 7,565.90 புள்ளிகளிலும் வர்த்தகமாகின. இந்திய பங்குசந்தைகள் தவிர்த்து ஆசியாவின் இதர பங்குசந்தைகளான ஜப்பானின் நிக்கி 3 சதவீதமும், ஹாங்காங்கின் ஹேங்சேங் 0.33 சதவீதமும் சரிவில் இருக்கின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|