பதிவு செய்த நாள்
09 ஆக2014
05:04
நெய்வேலி:என்.எல்.சி., நடப்பு நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 334 கோடியே 5 லட்சம் ரூயாய் நிகர லாபமாக ஈட்டி சாதனை படைத்துள்ளது.என்.எல்.சி., நிறுவனத்தில் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான நிதிநிலை அறிக்கை இயக்குனர் குழுக் கூட்டத்தில் நேற்று வெளியிடப்பட்டது.இதன்படி முதலாவது காலாண்டில் 485 கோடியே 55 லட்சம் ரூபாய் மொத்த லாபமாக ஈட்டி என்.எல்.சி., தனது முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது. நிகர லாபமாக 334 கோடியே 5 லட்சம் ரூபாயை ஈட்டியுள்ளது.மின் உற்பத்தியைப் பொறுத்தவரை, என்.எல்.சி., அனல்மின் நிலையங்கள் நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில் உற்பத்தி செய்யப்பட வேண்டிய குறியீட்டு இலக்கையும் மிஞ்சி 517 கோடியே 30 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்து வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளது.
என்.எல்.சி., தற்போது நெய்வேலியில் 500 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தையும் துாத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தையும் அமைத்து வருகிறது.நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் மின் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதுப்பிக்கவல்ல எரிசக்தி துறையான காற்றாலை ( 51 மெகாவாட்) மற்றும் சூரிய ஒளி (10 மெகாவாட்) மூலம் மின் சக்தி தயாரிக்கும் திட்டங்களின் மூலமாக 61 மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையங்களையும் இந்நிறுவனம் அமைத்து வருகிறது. இதன் மூலம் என்.எல்.சி., நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தி திறன் 4301 மெகாவாட்டாக அதிகரிக்க உள்ளது.
இது மட்டுமின்றி பழுப்பு நிலக்கரிக்குப் பதிலாக நிலக்கரியை எரிபொருளாக பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ( 1980 மெகாவாட்) மின் நிலையத்தை உத்திர பிரதேச மாநிலம், கதம்பூர் மாவட்டத்திலும் தமிழகத்தின் சீர்காழிப் பகுதியில் 4000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மற்றொரு மின் நிலையத்தையும் என்.எல்.சி., நிறுவனம் அமைக்க உள்ளது.அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு மணிக்கு ஒரு கோடியே 11 லட்சத்து 95 ஆயிரம் யூனிட் மின்சாரத்தை என்.எல்.சி., உற்பத்தி செய்ய உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|