பதிவு செய்த நாள்
09 ஆக2014
05:04
புதுடில்லி: தேவை அதிகரித்து வருவதால், நடப்பு 2014–15ம் நிதியாண்டில், மோட்டார் வாகன விற்பனை, 5–10 சதவீதம் வளர்ச்சி காணும் என, இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) தெரிவித்துள்ளது.சூடுபிடிப்பு:கடந்த மூன்று மாதங்களாக, உள்நாட்டில், வாகனங்களுக்கான தேவை சூடுபிடிக்க துவங்கியுள்ளது.இதற்கு எடுத்துக்காட்டாக, சென்ற ஜூலை மாதத்தில், ஒட்டு மொத்த வாகன விற்பனை, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15,86,123ஆக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 14,16,182ஆக இருந்தது.இதில், கார் விற்பனை 5.04 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,37,873 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே மாதத்தில், 1,31,257ஆக இருந்தது.
இதே போன்று, இருசக்கர வாகன விற்பனையும், 13.73 சதவீதம் உயர்ந்து, 11,32,066 என்ற எண்ணிக்கையிலிருந்து, 12,87,462ஆக வளர்ச்சி கண்டுள்ளது.புதிய மாடல்:இதுகுறித்து, சியாம் அமைப்பின் இயக்குனர் (பொது) விஷ்ணு மாத்துார் கூறியதாவது:மோட்டார் வாகனத் துறை மந்தகதியில் இருந்து மீண்டு வருகிறது. பொதுமக்கள் வாகன விற்பனை மையங்களுக்கு படையெடுக்க துவங்கிஉள்ளனர். பொருளாதாரம் விறுவிறுப்படையும் நிலையில், வரும் மாதங்களில், வாகன விற்பனை குறிப்பிடத்தக்க அளவிற்கு வளர்ச்சி காணும்.பண்டிகை காலத்தை முன்னிட்டு, பல்வேறு புதிய மாடல்களில் வாகனங்கள் சந்தையில் அறிமுகமாக உள்ளன. இதையடுத்து, நடப்பாண்டில், வாகன விற்பனை ஒற்றை இலக்க அளவிற்காவது வளர்ச்சி காணும் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|