பதிவு செய்த நாள்
09 ஆக2014
05:05
துபாய்: சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான, இந்திய மின்னணு பொருள் ஏற்றுமதி, 6.66 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவிலிருந்து, அதிகளவில் மின்னணு பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதில், ஐக்கிய அரபு நாடுகள் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன என, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (மத்திய கிழக்கு நாடுகள்) மண்டல இயக்குனர் கமல் வச்சானி தெரிவித்தார்.
சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 6.66 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10,440 கோடி ரூபாயாக (174 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 2012 – 13ம் நிதியாண்டில், 9,780 கோடி ரூபாயாக (163 கோடி டாலர்) இருந்தது.சென்ற நிதியாண்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான, இந்தியாவின் ஒட்டு மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 766 கோடி டாலராக இருந்தது என, கமல் வச்சானி மேலும் கூறினார்.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|