பதிவு செய்த நாள்
14 ஆக2014
00:03
புதுடில்லி ;பருவமழையால் தேவை குறைந்ததையடுத்து, கடந்த ஜூலையில், உச்சக்கட்ட நேர மின் பற்றாக்குறை, 3.9 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஜூன் மாதத்தில், 5.1 சதவீதமாக இருந்தது என, மத்திய மின்சார ஆணையத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கணக்கீட்டு மாதத்தில், நாட்டின் மொத்த மின் தேவை, 1,45,014 மெகாவாட்டாக இருந்தது. இதில், 1,39,320 மெகாவாட் அளவிற்கே பூர்த்தி செய்யப்பட்டது. ஆக, அம்மாதத்தில் மின் பற்றாக்குறை, 5,694 மெகாவாட்டாக இருந்தது.குறிப்பாக,தமிழகம், ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளாவில், உச்சக்கட்ட நேர மின் தேவை 35,748 மெகாவாட்டாக இருந்தது. இதில், 33,839 மெகாவாட் அளவிற்கே பூர்த்தி செய்யப்பட்டது. ஆக, மின் பற்றாக்குறை, 1,909 மெகாவாட்டாக இருந்தது என, புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|