பதிவு செய்த நாள்
14 ஆக2014
10:40
புதுடில்லி: 'பெட்ரோல் விலை, லிட்டருக்கு, குறைந்தபட்சம், 1.89 ரூபாய் முதல் அதிகபட்சம், 2.38 வரை, ஆகஸ்ட் 15ம் தேதி முதல் விலை குறைத்து விற்கப்படும்' என, மத்திய பெட்ரோலியத் துறை இணைஅமைச்சர், தர்மேந்திர பிரதான் நேற்று அறிவித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு...:
பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை கட்டுப்பாட்டை, 2010 ஜூன் முதல், மத்திய அரசு கைவிட்டு விட்டது. பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்கள் தான், அவ்வப்போது நிலவும் சர்வதேச விலை நிலவரத்திற்கு ஏற்ப, விலையில் மாற்றம் செய்து வருகின்றன.சமீப காலமாக, 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இந்நிலையில், இது வரை இல்லாத புதுமையாக, மத்திய அமைச்சர், விலை மாற்றத்தை அறிவித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு: அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், 'ஆகஸ்ட் 14ம் தேதி நள்ளிரவு, 12:00 மணி முதல், பெட்ரோல் விலை குறைக்கப்படுகிறது. லிட்டர் 1க்கு, 1.89 ரூபாயிலிருந்து, 2.38 ரூபாய் வரை, அந்தந்த நகரங்களின் விலை நிலவரப்படி விலை குறைத்து விற்கப்படும்' என்றார்.சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|