பதிவு செய்த நாள்
14 ஆக2014
11:01
இத்தாலி நாட்டை சேர்ந்த, பியட் கார் நிறுவனம், இந்தியாவில், பியட் ஆட்டோ மொபைல்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில், 1997 முதல் செயல்பட்டு வருகிறது. 2007 முதல், டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு, மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், ரஞ்சன்கான் என்ற இடத்தில் தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில், லினியா மற்றும் புன்டோ ஆகிய மாடல் கார்களை, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது, புன்டோ கார் மாடலில், புதிய காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு, ‘புன்டோ இவோ’ என, பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த காரின் சிறப்பு அம்சங்கள்:
* பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு பிரிவுகளிலும் கிடைக்கும்.
* ஏழு வேரியன்ட்களில், இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.
* கார் இருக்கையின் இருபுறமும், ‘ஏர்பேக்’ பாதுகாப்பு வசதி உள்ளது.
* பவர் விண்டோஸ், ரெய்னிடீர் முகப்பு விளக்குகள், எல்.இ.டி., பின்புற விளக்குகள், வெளிப்புற கண்ணாடியில், சமிக்ஞை விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்.
* கதவுகளில் குடிநீர் பாட்டில் வைக்கும் வசதி, கோப்பைகளை வைக்க, நீட்டித்து மடக்கும் வசதி, பின்புறம் ‘ஏசி’ வென்ட், பின்புற இருக்கைகளை மடக்கி உபயோகிக்கும் வசதி.
* காருக்கு, மூன்று ஆண்டுகால உத்தரவாதம். இதை, மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ளும் வசதி உண்டு.
* 45,000 கி.மீ., வரையிலான, மொத்த பழுது நீக்கும், காரை நிர்வகிக்கும் திட்டம், மிக குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.
பெட்ரோல் கார் விலை : 4,67,509 முதல் 5,24,521 ரூபாய் வரை (இரண்டு வேரியன்ட்கள்).
டீசல் கார் விலை : 5,40,005 முதல் 7,35,894 ரூபாய் வரை (நான்கு வேரியன்ட்கள்).
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|