பெட்ரோல் விலை குறைகிறது!பெட்ரோல் விலை குறைகிறது! ... தங்கம் விலை ரூ.40 குறைந்தது தங்கம் விலை ரூ.40 குறைந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பியட் நிறுவனத்தின் புதிய கார் புன்டோ இவோ!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2014
11:01

இத்தாலி நாட்டை சேர்ந்த, பியட் கார் நிறுவனம், இந்தியாவில், பியட் ஆட்டோ மொபைல்ஸ் இந்தியா லிமிடெட் என்ற பெயரில், 1997 முதல் செயல்பட்டு வருகிறது. 2007 முதல், டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, கார்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு, மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், ரஞ்சன்கான் என்ற இடத்தில் தொழிற்சாலை உள்ளது. இந்தியாவில், லினியா மற்றும் புன்டோ ஆகிய மாடல் கார்களை, இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. தற்போது, புன்டோ கார் மாடலில், புதிய காரை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு, ‘புன்டோ இவோ’ என, பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த காரின் சிறப்பு அம்சங்கள்:
* பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு பிரிவுகளிலும் கிடைக்கும்.
* ஏழு வேரியன்ட்களில், இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.
* கார் இருக்கையின் இருபுறமும், ‘ஏர்பேக்’ பாதுகாப்பு வசதி உள்ளது.
* பவர் விண்டோஸ், ரெய்னிடீர் முகப்பு விளக்குகள், எல்.இ.டி., பின்புற விளக்குகள், வெளிப்புற கண்ணாடியில், சமிக்ஞை விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்.
* கதவுகளில் குடிநீர் பாட்டில் வைக்கும் வசதி, கோப்பைகளை வைக்க, நீட்டித்து மடக்கும் வசதி, பின்புறம் ‘ஏசி’ வென்ட், பின்புற இருக்கைகளை மடக்கி உபயோகிக்கும் வசதி.
* காருக்கு, மூன்று ஆண்டுகால உத்தரவாதம். இதை, மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துக் கொள்ளும் வசதி உண்டு.
* 45,000 கி.மீ., வரையிலான, மொத்த பழுது நீக்கும், காரை நிர்வகிக்கும் திட்டம், மிக குறைந்த கட்டணத்தில் அளிக்கப்படுகிறது.
பெட்ரோல் கார் விலை : 4,67,509 முதல் 5,24,521 ரூபாய் வரை (இரண்டு வேரியன்ட்கள்).
டீசல் கார் விலை : 5,40,005 முதல் 7,35,894 ரூபாய் வரை (நான்கு வேரியன்ட்கள்).

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)