பதிவு செய்த நாள்
14 ஆக2014
11:04
பெங்களூரை மையமாக கொண்டு செயல்படும், ஏ.சி.டி.டி., நிறுவனம், பசுமையைப் பாதுகாக்கும் வகையில், ‘பி.ஓ.வி., – பேட்டரி ஆபரேட்டட் வெகிக்கிள்’ என்ற, இருசக்கர வாகனத்தை, விற்பனை செய்து வருகிறது. இந்த வாகனம், மொபைல்போனை போல், மின்சாரத்தால் சார்ஜ் செய்யப்பட்டு இயக்கப்படுவது. இந்த வாகனத்தை, 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே, ஓட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த வாகனத்திற்கு, லைசென்ஸ், நம்பர் பிளேட் போன்ற நடைமுறைகள் கிடையாது. ‘கோஹ்ரா, கவச், கிமாயா, சுனோதி’ ஆகிய நான்கு மாடல்களில், இந்த நிறுவன வாகனங்கள், தமிழகத்தில் விற்பனைக்கு வந்துள்ளன.
இந்த வாகனத்தின் சிறப்பு அம்சங்கள்
* கோ கிரீன் பி.ஓ.வி., வாகனத்தை, 6 முதல் 10 மணி வரை சார்ஜ் செய்தால், 2.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.
* ஒருமுறை சார்ஜ் செய்தால், குறைந்தபட்சம், 50 கி.மீ., முதல் 120 கி.மீ., வரை பயணம் செய்யலாம்.
* இந்த வாகனத்தில், டி.சி., மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது.
* வாகனத்தில் பொருத்தப்பட்ட பாட்டரிக்கு, ஆறு மாத, ‘வாரரண்டி’ அளிக்கப்படுகிறது.
* பெரிய அளவில் பராமரிப்பு பிரச்னை கிடையாது. காற்று மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தாத வாகனம்.
கர்நாடக மாநிலம், கோலார் பகுதியில் உள்ள, கோ கிரீன் தொழிற்சாலையில், மாதம் 6,000 வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வாகனத்தின் விலை, மாடலை பொறுத்து, 38 ஆயிரம் ரூபாய் முதல் 54 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|