பதிவு செய்த நாள்
14 ஆக2014
17:28
மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து நான்காவது நாளாக ஏற்றத்தில் முடிந்தன, சென்செக்ஸ் மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது. ஜூலை மாதத்திற்கான பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.19 சதவீதமாக குறைந்தது, அந்நிய முதலீடுகள் அதிகரித்தது போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் ஏற்றத்துடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 184.28 புள்ளிகள் உயர்ந்து 26,103.23-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 52.15 புள்ளிகள் உயர்ந்து 7,791.70-ஆகவும் முடிந்தன. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்செக்ஸ் 774 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 22 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 8 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. குறிப்பாக ஓஎன்ஜிசி., பங்குகள் 2.03 சதவீதமும், டாடா ஸ்டீல் பங்குகள் 1.23 சதவீதமும் ஏற்றம் கண்டு இருந்தன. இவைகள் தவிர்த்து கெயில் இந்தியா, ஐடிசி., எல்அண்ட்டி., சிப்லா, சன்பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மாருதி சுசூகி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ஐசிஐசிஐ., ஆக்சிஸ், எச்டிஎப்சி., பெல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர் உள்ளிட்ட அநேக பங்குகள் ஏற்றம் கண்டு இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|