பதிவு செய்த நாள்
15 ஆக2014
10:51
சென்னை : 'ஜெட் ஏர்வேஸ்' இந்த நிதியாண்டின், முதல் மூன்று மாத செயல்பாடுகள் குறித்த, அறிக்கையை மும்பையில் வெளியிட்டது. இதுகுறித்து, நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் கூறியதாவது: 'ஜெட் ஏர்வேஸ்' நேரடி அன்னிய முதலீட்டை ஈர்த்த இந்தியாவின், முதல் விமான நிறுவனம். 24 சதவீத பங்குகள், அரபு நாட்டைச் சேர்ந்த, எதிகார்டு ஏர்வேஸ் பெற்றுள்ளது.
கடந்த ஆண்டின், முதல் மூன்று மாதங்களில், 'ஜெட் ஏர்வேஸ்' 348.5 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தது. நடப்பு ஆண்டின், மூன்று மாதங்களில், நஷ்டத்தின் அளவு, 258 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. 26 சதவீத மேம்பாடு என்பது ஆரோக்கியமான போக்கு தான். மூன்று ஆண்டுகளில், இது, லாபம் ஈட்டும் நிறுவனமாக மாறும். குறைந்த கட்டண சேவையில் தான், நிறைய நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, இந்த சேவையை, மறு சீரமைப்பு செய்ய, இயக்குனர்கள் குழு முடிவு செய்துள்ளது. இது, ஆண்டு இறுதியில் நடைமுறைக்கு வரும்; எல்லா சேவைகளும், 'ஜெட் ஏர்வேஸ்' என்ற ஒரே பிராண்டுடன் செயல்படும். இந்த ஆண்டின் இறுதியில், அபுதாபி, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு, 12 புதிய சர்வதேச விமானங்களை இயக்க உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|