பதிவு செய்த நாள்
16 ஆக2014
00:19
புதுடில்லி:ஐந்து மாதங்களில் இல்லாத வகையில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற ஜூலையில், தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.,) துறை நிறுவன பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, 27,596 கோடி ரூபாயை எட்டியுள்ளது.இது, பரஸ்பர நிதி நிறுவனங்கள் நிர்வகித்து வரும் ஒட்டு மொத்த சொத்து மதிப்பில் (2.61 லட்சம் கோடி ரூபாய்), 10.55 சதவீதமாகும் என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) தெரிவித்துள்ளது.இதற்கு முன், கடந்த பிப்ரவரியில் தான், தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகளில், பரஸ்பர நிதி நிறுவனங்கள், அதிகபட்சமாக, 28,784 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தன. இது, சென்ற ஜூனில், 26,595 கோடி ரூபாயாக இருந்தது.பரஸ்பர நிதி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப துறைக்கு அடுத்தபடியாக, மருந்து (17,542 கோடி ரூபாய்), மோட்டார் வாகனம் (14,441 கோடி), நிதி (14,359 கோடி ரூபாய்) ஆகியவற்றில் மேற்கொண்ட முதலீடு குறிப்பிடத்தக்க அளவிற்கு உள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|