பதிவு செய்த நாள்
16 ஆக2014
00:41
புதுடில்லி:சென்ற ஜூலையில், ஜி.எஸ்.எம்., மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 48.50 லட்சம் அதிகரித்து, 74.44 கோடியாக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை, 73.95 கோடியாக இருந்தது என, இந்திய செல்லுலார் கூட்டமைப்பு (சி.ஓ.ஏ.ஐ.,) தெரிவித்துள்ளது.
வோடபோன்:மதிப்பீட்டு மாதத்தில், வோடபோன் நிறுவனம் அதிகபட்சமாக, 13.68 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 17.12 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 23.01 சதவீதமாகும். ஐடியா செல்லுலார் நிறுவனம், 11.05 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து கொண்டதையடுத்து, மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 14.01 கோடியாக அதிகரித்துஉள்ளது. இந்நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 18.82 சதவீதமாகும்.
கணக்கீட்டு மாதத்தில், பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிதாக, 5.10 லட்சம் சந்தாதாரரை ஈர்த்துக் கொண்டதையடுத்து, மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 20.97 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. இந்நிறுவனம், 28.18 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்செல் நிறுவனம், 9.17 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டதையடுத்து, மொத்த சந்தாதாரர் எண்ணிக்கை, 7.39 கோடியாக உயர்ந்துள்ளது. இதே போன்று, யூனிநார் நிறுவனம், 8.53 லட்சம் சந்தாதாரரை ஈர்த்து கொண்டதையடுத்து, மொத்த எண்ணிக்கை, 4.01 கோடியாக அதிகரித்துள்ளது.
மதிப்பீட்டு மாதத்தில், வீடியோகான் மற்றும் பொதுத் துறையைச் சேர்ந்த எம்.டி.என்.எல்., நிறுவனங்கள் முறையே, 87,436 மற்றும் 7,704 வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்களின் ஒட்டு மொத்த வாடிக்கையாளர்எண்ணிக்கை முறையே, 56.37 லட்சம் மற்றும் 32.83 லட்சம் என்ற அளவில்உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோமேற்கண்ட மொத்த எண்ணிக்கையில், ரிலையன்ஸ் கம்யூனிசேர்க்கப்படவில்லை. ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனம் கூட்டமைப்பில் புதிதாக இணைந்துள்ளதாக, சி.ஓ.ஏ.ஐ., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|