பதிவு செய்த நாள்
17 ஆக2014
03:56

மும்பை : நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற 8ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 3,840 கோடி ரூபாய் சரிவடைந்து (64 கோடி டாலர்), 19.16 லட்சம் கோடி ரூபாயாக (31,935 கோடி டாலர்) குறைந்துள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கணக்கீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 65 கோடி டாலர் குறைந்து, 29,205 கோடி டாலராக வீழ்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பில் மாற்றம் எதுவுமின்றி, 2,117 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது. மதிப்பீட்டு வாரத்தில், எஸ்.டீ.ஆர்., மதிப்பு, 25 லட்சம் டாலர் அதிகரித்து, 442 கோடி டாலராகவும், சர்வதேச நிதியத்தில் நம்நாடு வைத்துள்ள செலாவணிகளின் கையிருப்பு, 9 லட்சம் டாலர் உயர்ந்து, 170 கோடி டாலராகவும் அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கி புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|