பதிவு செய்த நாள்
18 ஆக2014
01:10
புதுடில்லி:இந்திய நிறுவனங்களிடையேயான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, சென்ற ஜூலை மாதத்தில், 39,240 கோடி ரூபாயாக (654 கோடி டாலர்) அதிகரித்துள்ளது.இது, கடந்தாண்டில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் நடவடிக்கையுடன் (27,540 கோடி ரூபாய் / 459 கோடி டாலர்) ஒப்பிடுகையில், 42.48 சதவீதம் அதிகமாகும் என, கிராண்ட் தோர்ன்டன் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே காலத்தில், நிறுவனங்களிடையே இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும், 42லிருந்து 56ஆக வளர்ச்சி கண்டுள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது, நடப்பாண்டில், உள்நாட்டு நிறுவனங்களிடையேயான இணைத்தல் – கையகப்படுத்தல் நடவடிக்கை, அளவு மற்றும் மதிப்பின் அடிப்படையில், இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகரித்துள்ளது.நடப்பாண்டின் முதல் ஏழு மாத காலத்தில் (ஜன., – ஜூலை), நிறுவனங்களிடையேயான இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, 1.43 லட்சம் கோடி ரூபாயை (2,382 கோடி டாலர்) எட்டியுள்ளது என, கிராண்ட் தோர்ன்டன் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|