இண்­டர்நெட் வாடிக்­கை­யாளர் எண்­ணிக்கை 5.4 சத­வீதம் உயர்வுஇண்­டர்நெட் வாடிக்­கை­யாளர் எண்­ணிக்கை 5.4 சத­வீதம் உயர்வு ... தக்காளி விலை கிடுகிடு உயர்வு தக்காளி விலை கிடுகிடு உயர்வு ...
வேளாண் பொருட்கள் ஏற்­று­மதி 2.7 சத­வீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2014
01:16

புது­டில்லி:நடப்பு 2014 – 15ம் நிதி­யாண்டின் முதல் காலாண்டில் (ஏப்., – ஜூன்), இந்­தி­யாவின் ஒட்டு மொத்த வேளாண் பொருட்கள் ஏற்­று­மதி, 2.7 சத­வீதம் சரி­வ­டைந்து, 33,649 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது.இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 34,581 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து காணப்­பட்­டது என, வேளாண் மற்றும் பதப்­ப­டுத்­தப்­பட்ட உணவுப் பொருட்கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு ஆணையம் (அபெடா) தெரி­வித்­துள்­ளது.பாதிப்பு:குறிப்­பாக, மதிப்­பீட்டு காலாண்டில், கொத்­த­வரை ஏற்­று­மதி, 50 சத­வீ­தத்­திற்கும் மேல் சரி­வ­டைந்து, 4,634 கோடி­யி­லி­ருந்து, 2,316 கோடி ரூபா­யாக வீழ்ச்சி கண்­டுள்­ளது.
இதன் கார­ண­மா­கவே ஒட்டு மொத்த ஏற்­று­மதி பாதிக்­கப்­பட்­டுள்­ளது.இருப்­பினும், பாசு­மதி அரிசி, நிலக்­க­டலை, பதப்­ப­டுத்­தப்­பட்ட காய்­க­றிகள் மற்றும் பழங்கள் ஏற்­று­மதி குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு அதி­க­ரித்­துள்­ளது.சவுதி அரே­பியா, ஈரான் மற்றும் மேற்கு ஆசியா நாடு­களில், இந்­திய நறு­மண நீள்­வகை பாசு­மதி அரி­சிக்­கான தேவை சிறப்­பான அளவில் வளர்ச்சி கண்­டுள்­ளது. இதை­ய­டுத்து, அந்­நா­டு­க­ளுக்­கான இதன் ஏற்­று­மதி, கணக்­கீட்டு காலாண்டில், 8 சத­வீதம் உயர்ந்து, 8,400 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
இது, கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்டில், 7,757 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே போன்று, சாதா­ரண வகை அரிசி ஏற்­று­ம­தியும், 3,353 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.கடந்த நிதி­யாண்டில், ஒட்டு மொத்த அரிசி ஏற்­று­மதி, 40 ஆயிரம் கோடி ரூபா­யாக இருந்­தது. இதில், பாசு­மதி அரி­சியின் பங்­க­ளிப்பு மட்டும், 28 ஆயிரம் கோடி ரூபா­யாகும்.வரவேற்பு:சாதா­ரண வகை அரிசி ஏற்­று­ம­திக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த தடை, கடந்த 2011ம் ஆண்டு விலக்கி கொள்­ளப்­பட்­ட­தை­ய­டுத்து, உல­க­ளவில், அதற்­கான தேவை பெருகி வரு­கி­றது. குறிப்­பாக, ஆப்­ரிக்கா, ஐரோப்­பிய நாடு­களில், இந்­திய சாதா­ரண வகை அரி­சிக்கு சிறந்த வர­வேற்பு காணப்­ப­டு­கி­றது. இதை­ய­டுத்து, கடந்த இரண்டு நிதி­யாண்­டு­களில் மட்டும், 1 கோடி டன் அரிசி ஏற்­று­மதி செய்­யப்­பட்­டுள்­ளது.மாமிச உணவுப் பொருட்கள் ஏற்­று­ம­தியில், மாட்­டி­றைச்­சியின் பங்­க­ளிப்பு, 86 சத­வீ­த­மாக உள்­ளது.
இதன் ஏற்­று­மதி, மதிப்­பீட்டு காலாண்டில், 17 சத­வீதம் அதி­க­ரித்து, 4,634 கோடி­யி­லி­ருந்து, 5,742 கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.இவை தவிர, நிலக்­க­டலை (34 சத­வீதம்), கோகோ (144 சத­வீதம்), பதப்­ப­டுத்­தப்­பட்ட காய்­க­றிகள் (38 சத­வீதம்) ஆகி­யவை குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு வளர்ச்சி கண்­டுள்­ளன.அதே­ச­மயம், கோதுமை (24 சத­வீதம்), பருப்பு வகைகள் (16 சத­வீதம்), பால் பொருட்கள் (19 சத­வீதம்) ஆகி­ய­வற்றின் ஏற்­று­மதி சரிவை கண்­டுள்­ளது என, ‘அபெடா’ மேலும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)