பதிவு செய்த நாள்
18 ஆக2014
17:03
மும்பை : வாரத்தின் முதல்நாளில் மந்தமாக ஆரம்பித்த இந்திய பங்குசந்தைகள் முக்கிய நிறுவன பங்குகளின் ஏற்றத்தால் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையில், தொழில்துறை உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தது, ஜூன் முதல்காலாண்டில் அநேக நிறுவனங்களின் லாபம் உயர்ந்தது, இதனால் அது தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டதன் விளைவு, அந்நிய முதலீடுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 287 புள்ளிகள் உயர்ந்து 26,390.96-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 83 புள்ளிகள் உயர்ந்து 7,874.25-ஆகவும் முடிந்து உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவன பங்குகள் ஏற்றத்தில் முடிந்தன. குறிப்பாக ஐசிஐசிஐ., ஓஎன்ஜிசி., டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, சிப்லா மற்றும் பெல் நிறுவன பங்குகள் அதிக ஏற்றத்துடன் காணப்பட்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|