பதிவு செய்த நாள்
19 ஆக2014
00:40

மும்பை: சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இருந்ததால், நாட்டின் பங்கு வியாபாரம், நேற்று விறுவிறுப்புடன் காணப்பட்டது.அன்னிய முதலீட்டு வரத்து அதிகரிப்பு மற்றும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கி குவித்தது போன்றவற்றால், ‘சென்செக்ஸ்’ மற்றும் ‘நிப்டி’ முறையே, 1.10 சதவீதம், 1.06 சதவீதம் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டின.நேற்றைய வர்த்தகத்தில், எண்ணெய், எரிவாயு, வங்கி, பொறியியல் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு அதிக தேவை காணப்பட்டது. அதேசமயம், நுகர்பொருட்கள், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 287.73 புள்ளிகள் அதிகரித்து, 26,390.96 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஓ.என்.ஜி.சி., சிப்லா உள்ளிட்ட, 25 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், ஐ.டி.சி., இன்போசிஸ் உள்ளிட்ட, 5 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 82.55 புள்ளிகள் உயர்ந்து, 7,874.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|