பதிவு செய்த நாள்
23 ஆக2014
09:00
புதுடில்லி : சர்க்கரை ஆலைகளில் அதிக அளவில் சர்க்கரை தேங்கி கிடப்பதை தடுப்பதற்காக சர்க்கரைக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இறக்குமதி வரியை அதிகரிப்பதன் மூலம் உள்ளூர் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளிடம் இருந்து அதிகளவிலான கரும்புகளை கொள்முதல் செய்ய வழிவகுக்கும். கரும்பு விவசாயிகளிடம் இருந்து ரூ.9000கோடி அளவிலான கரும்புகளை கொள்முதல் செய்யவும் வழி பிறக்கும்.
விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கும் இந்த புதிய உத்தரவை மத்திய கலால் மற்றும் சுங்க வரி கழகம் நேற்று வெளியிட்டுள்ளது. உலகில் சர்க்கரை அதிகம் பயன்படுத்தும் நாடு இந்தியா ஆகும். ஜூலை 31 வரையிலான கால அளவில் இந்தியாவில் 660,000 டன்னுக்கும் அதிகமான சர்க்கரை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் ரூபாய் மற்றும் டாலர் இடையேயான நாணய பறிமாற்றம் அதிகரிக்கவும் வாய்ப்பு இருப்பதாக சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|