பதிவு செய்த நாள்
25 ஆக2014
00:09
மும்பை: நடப்பு, 2014 – 15ம் நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கான, 35 ஆயிரம் கோடி டாலரை தாண்டும் என, ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர், ரபீக் அகமது தெரிவித்தார்.கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில், ஏற்றுமதி முறையே, 12.4 சதவீதம் மற்றும் 10.22 சதவீதம் அதிகரித்திருந்தது. இந்நிலையில் சென்ற ஜூலையிலும், நாட்டின் ஏற்றுமதி இரட்டை இலக்க வளர்ச்சி காணும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஏற்றுமதி, 7 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 2,772 கோடி டாலராக இருந்தது.இதற்கு, நவரத்தினங்கள், ஆபரணங்கள், ஜவுளி, மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்து போனதே முக்கிய காரணமாகும்.
எனினும், அம்மாதத்தில், மருந்து, ஆயத்தஆடைகள், தோல் பொருட்கள், கடல் உணவுப் பொருட்கள் இயந்திரங்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி சிறப்பான அளவில் இருந்தது.சர்வதேச அளவில் பொருளாதாரம் மேம்பட்டு வருகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளிலும் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காரணங்களால், வரும் மாதங்களில், ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்து, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டும் என, ரபீக் மேலும் கூறினார்.நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் நான்கு மாதங்களில், நாட்டின் ஏற்றுமதி, 8.62 சதவீதம் அதிகரித்து, 10,780 கோடி டாலராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|