‘நாட்டின் ஏற்றுமதி இலக்கை தாண்டும்’‘நாட்டின் ஏற்றுமதி இலக்கை தாண்டும்’ ... நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.73,730 கோடி நவரத்தின ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.73,730 கோடி ...
மாதுளை உற்பத்தி சூடுபிடிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஆக
2014
00:12

புதுடில்லி: நாடு தழுவிய அளவில் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், வரும் நவம்பர் மாதம் முதல், மாதுளை உற்பத்தி சிறப்பான அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மகாராஷ்டிரா:இதையடுத்து, உள்நாட்டில் மாதுளை உற்பத்தி, வழக்கமான, 8 லட்சம் டன்னிலிருந்து, 12 – 13 லட்சம் டன் என்ற அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் ஒட்டுமொத்த மாதுளை உற்பத்தியில், மகாராஷ்டிரா, 90 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் வழக்கமாக, 85 ஆயிரம் ஹெக்டேரில் மாதுளை பயிரிடப்படும். ஆனால், தற்போது, இதைவிட, கூடுதலாக, 50 ஆயிரம் ஹெக்டேரில் மாதுளை பயிரிடப்பட்டுள்ளது.
இதே போன்று, கூடுதலாக, குஜராத் மாநிலத்தில், 15 ஆயிரம் ஹெக்டேரிலும், மத்திய பிரதேசத்தில், 10 ஆயிரம் ஹெக்டேரிலும் மாதுளை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தேவை குறைவு:மாதுளைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் பலர், திராட்சை பயிரிடுவதை தவிர்த்து, மாதுளை சாகுபடியில் கவனம் செலுத்த துவங்கிஉள்ளனர்.இதன் காரணமாக, மாதுளை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதையடுத்து, வரும் நவம்பர் முதல் இதன் வரத்து சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்தாண்டில், ஒரு கிலோ மாதுளை, 100 – 150 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, சில்லரை விற்பனையில், இதன் விலை, 50 – 60 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இந்திய மாதுளை, துபாய், இங்கிலாந்து, சவுதி அரேபியா, நெதர்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.தற்போது, தேவை குறைவு மற்றும் தரம், அளவு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, இந்நாடுகளுக்கான மாதுளை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.40 ஆயிரம் டன்:மேலும், பணப்பட்டுவாடா பிரச்னைகளால், ரஷ்யாவிற்கான மாதுளை ஏற்றுமதியிலும்,வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.சென்ற நிதியாண்டில், நாட்டின் மாதுளை ஏற்றுமதி, 40 ஆயிரம் டன் என்ற அளவில் இருந்தது. பொதுவாக, நவம்பர் முதற்கொண்டு மாதுளை ஏற்றுமதி சூடுபிடிக்கும் என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)