பதிவு செய்த நாள்
25 ஆக2014
00:12
புதுடில்லி: நாடு தழுவிய அளவில் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதால், வரும் நவம்பர் மாதம் முதல், மாதுளை உற்பத்தி சிறப்பான அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மகாராஷ்டிரா:இதையடுத்து, உள்நாட்டில் மாதுளை உற்பத்தி, வழக்கமான, 8 லட்சம் டன்னிலிருந்து, 12 – 13 லட்சம் டன் என்ற அளவில் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நாட்டின் ஒட்டுமொத்த மாதுளை உற்பத்தியில், மகாராஷ்டிரா, 90 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் வழக்கமாக, 85 ஆயிரம் ஹெக்டேரில் மாதுளை பயிரிடப்படும். ஆனால், தற்போது, இதைவிட, கூடுதலாக, 50 ஆயிரம் ஹெக்டேரில் மாதுளை பயிரிடப்பட்டுள்ளது.
இதே போன்று, கூடுதலாக, குஜராத் மாநிலத்தில், 15 ஆயிரம் ஹெக்டேரிலும், மத்திய பிரதேசத்தில், 10 ஆயிரம் ஹெக்டேரிலும் மாதுளை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.தேவை குறைவு:மாதுளைக்கு நல்ல விலை கிடைத்து வருவதால், விவசாயிகள் பலர், திராட்சை பயிரிடுவதை தவிர்த்து, மாதுளை சாகுபடியில் கவனம் செலுத்த துவங்கிஉள்ளனர்.இதன் காரணமாக, மாதுளை சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளதையடுத்து, வரும் நவம்பர் முதல் இதன் வரத்து சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கடந்தாண்டில், ஒரு கிலோ மாதுளை, 100 – 150 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, சில்லரை விற்பனையில், இதன் விலை, 50 – 60 ரூபாய் என்ற அளவில் உள்ளது.
இந்திய மாதுளை, துபாய், இங்கிலாந்து, சவுதி அரேபியா, நெதர்லாந்து, எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.தற்போது, தேவை குறைவு மற்றும் தரம், அளவு உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக, இந்நாடுகளுக்கான மாதுளை ஏற்றுமதி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.40 ஆயிரம் டன்:மேலும், பணப்பட்டுவாடா பிரச்னைகளால், ரஷ்யாவிற்கான மாதுளை ஏற்றுமதியிலும்,வர்த்தகர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.சென்ற நிதியாண்டில், நாட்டின் மாதுளை ஏற்றுமதி, 40 ஆயிரம் டன் என்ற அளவில் இருந்தது. பொதுவாக, நவம்பர் முதற்கொண்டு மாதுளை ஏற்றுமதி சூடுபிடிக்கும் என, இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|