பதிவு செய்த நாள்
25 ஆக2014
00:14
மும்பை,: நடப்பு 2014 – 15ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான, முதல் நான்கு மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மொத்த ஏற்றுமதி, 3.33 சதவீதம் சரிவடைந்து, 73,730 கோடி ரூபாயாக சரிவடைந்து உள்ளது.புள்ளிவிவரத்தில்கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இவற்றின் ஏற்றுமதி, 76,272 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஜி.ஜே.இ.பி.சி.,) தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், டாலர் மதிப்பின் அடிப்படையிலும், இவற்றின் ஏற்றுமதி, 8.12 சதவீதம் குறைந்து, 1,341 கோடி டாலரிலிருந்து, 1,232 கோடி டாலராக சரிவடைந்து உள்ளது.கணக்கீட்டு காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 44,897 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியுடன் (47,962 கோடி ரூபாய்) ஒப்பிடுகையில், 6.39 சதவீதம் குறைவாகும்.வளர்ச்சிமேலும், இவற்றின் ஏற்றுமதி அளவின் அடிப்படையிலும், 125 லட்சம் காரட்டிலிருந்து, 116 லட்சம் காரட்டாக சரிவடைந்து உள்ளது.அதேசமயம், ஒட்டுமொத்த தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 17.27 சதவீதம் அதிகரித்து, 13,190 கோடி ரூபாயிலிருந்து, 15,468 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.
மேலும், இவற்றின் ஏற்றுமதி டாலர் மதிப்பின் அடிப்படையிலும், 11.32 சதவீதம் உயர்ந்து, 232 கோடி டாலரிலிருந்து, 258 கோடி டாலராக அதிகரித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதியும், 4.54 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5,794 கோடியிலிருந்து, 6,057 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதே போன்று, வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதியும், 11.4 சதவீதம் அதிகரித்து, 2,984 கோடியிலிருந்து, 3,324 கோடி ரூபாயாக வளர்ச்சிகண்டுள்ளது.அதேசமயம், நாட்டின் நவரத்தினங்கள் ஏற்றுமதி, 40.31 சதவீதம் குறைந்து, 1,249 கோடி ரூபாயிலிருந்து, 745 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.வீழ்ச்சிஇதே போன்று, கணக்கீட்டு காலத்தில், கச்சா வைரங்கள் ஏற்றுமதியும், 4.30 சதவீதம் சரிவடைந்து, 3,128 கோடியிலிருந்து, 2,993 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இவற்றின் ஏற்றுமதி அளவின் அடிப்படையிலும், 33.69 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 165 லட்சம் காரட்டிலிருந்து, 109 லட்சம் காரட்டாக குறைந்துள்ளது. மேலும், செயற்கை முத்துக்கள் உள்ளிட்ட இதர வகைகள் ஏற்றுமதி, 241 கோடி ரூபாயாக உள்ளது என, ஜி.ஜே.இ.பி.சி., கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|