பதிவு செய்த நாள்
26 ஆக2014
00:59
புதுடில்லி :பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகத்தை வலுப்படுத்தும் வகையில், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சி.எம்.டி.,) பதவியை பிரிப்பது குறித்து, நிதி அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருவதாக, மத்திய நிதி செயலர் ஜி.எஸ்.சாந்து தெரிவித்தார்.ரிசர்வ் வங்கி, வங்கிகளின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சி.எம்.டி.,) பதவியை பிரிப்பது குறித்து ஆய்வு செய்ய, கடந்த 2004 - 05ம் ஆண்டில், ஏ.எஸ்.கங்குலி தலைமையில், குழு ஒன்றை அமைத்தது. அக்குழு, சி.எம்.டீ., பதவியை பிரிக்க வேண்டும் என, பரிந்துரைத்தது.அதனடிப்படையில், கடந்த 2007ம் ஆண்டில், தனியார் துறை வங்கிகளில் இந்த பரிந்துரை அமல்படுத்தப்பட்டது.பொதுத் துறை வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் இடர்பாடுகளை தவிர்த்திடும் வகையில், அதிகாரம் பொருந்திய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சி.எம்.டி.,) பதவியை பிரிக்க நிதி அமைச்சகம் தீவிரமாக ஆலோசித்து வருகிறது என, சாந்து தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|