பதிவு செய்த நாள்
26 ஆக2014
01:01
மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம், காலையில் துவங்கியதும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.இதையடுத்து, பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில், 1993 முதல் 2010ம் ஆண்டு வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமானது எனக்கூறி, சுப்ரீம் கோர்ட் அவற்றை ரத்து செய்தது.இதைடுத்து, பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. குறிப்பாக, ஹிண்டால்கோ நிறுவனப் பங்கின் விலை, 9.56 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. இறுதியில், 'சென்செக்ஸ்' சற்று உயர்வுடனும், 'நிப்டி' சரிவுடனும் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், உலோகத் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 4.34 சதவீதம் சரிவை கண்டது. இதையடுத்து, ரியல் எஸ்டேட் (-2.01 சதவீதம்), மின்சாரம் (-1.24 சதவீதம்) ஆகிய துறைகள் உள்ளன.நேற்றைய வியாபாரத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,) மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் (டி.ஐ.ஐ.,) முறையே, 127 கோடி மற்றும் 46 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை வாங்கியுள்ளதாக தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 17.47 புள்ளிகள் உயர்ந்து, 26,437.02 புள்ளிகளில் நிலைபெற்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சேசா ஸ்டெர்லைட், டாடா பவர் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டி.சி.எஸ்., டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 6.90 புள்ளிகள் சரிவடைந்து, 7,906.30 புள்ளிகளில் நிலைகொண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|