பங்கு சார்ந்த பரஸ்பர நிதிதிட்ட கணக்குகள் உயர்வுபங்கு சார்ந்த பரஸ்பர நிதிதிட்ட கணக்குகள் உயர்வு ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.43 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.60.43 ...
சுரங்க ஒதுக்கீடு ரத்து எதிரொலி 'நிப்டி' சரிவு; 'சென்செக்ஸ்' உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2014
01:01

மும்பை :நாட்டின் பங்கு வர்த்தகம், காலையில் துவங்கியதும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.இதையடுத்து, பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில், 1993 முதல் 2010ம் ஆண்டு வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமானது எனக்கூறி, சுப்ரீம் கோர்ட் அவற்றை ரத்து செய்தது.இதைடுத்து, பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. குறிப்பாக, ஹிண்டால்கோ நிறுவனப் பங்கின் விலை, 9.56 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டது. இறுதியில், 'சென்செக்ஸ்' சற்று உயர்வுடனும், 'நிப்டி' சரிவுடனும் நிறைவடைந்தது.
நேற்றைய வர்த்தகத்தில், உலோகத் துறை குறியீட்டு எண், அதிகபட்சமாக, 4.34 சதவீதம் சரிவை கண்டது. இதையடுத்து, ரியல் எஸ்டேட் (-2.01 சதவீதம்), மின்சாரம் (-1.24 சதவீதம்) ஆகிய துறைகள் உள்ளன.நேற்றைய வியாபாரத்தில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,) மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்கள் (டி.ஐ.ஐ.,) முறையே, 127 கோடி மற்றும் 46 கோடி ரூபாய் மதிப்பிற்கு பங்குகளை வாங்கியுள்ளதாக தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 17.47 புள்ளிகள் உயர்ந்து, 26,437.02 புள்ளிகளில் நிலைபெற்றது. 'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சேசா ஸ்டெர்லைட், டாடா பவர் உள்ளிட்ட, 16 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டி.சி.எஸ்., டாக்டர் ரெட்டீஸ் உள்ளிட்ட, 14 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி', 6.90 புள்ளிகள் சரிவடைந்து, 7,906.30 புள்ளிகளில் நிலைகொண்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)