பதிவு செய்த நாள்
26 ஆக2014
10:07
மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று காலையில் துவங்கியதும் விறுவிறுப்புடன் காணப்பட்டது.இதையடுத்து, பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை எட்டியிருந்த நிலையில், 1993 முதல் 2010ம் ஆண்டு வரையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் சட்ட விரோதமானது எனக்கூறி, சுப்ரீம் கோர்ட் அவற்றை ரத்து செய்தது. இதைடுத்து, பங்கு வர்த்தகம் சுணக்கம் கண்டது. இதனால் சென்செக்ஸ் ஏற்றத்துடனும், நிப்டி சரிவுடனும் முடிந்தன. அதேநிலை இன்றும் தொடர்கிறது. நிலக்கரி, பவர், மெட்டல் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவில் இருக்கின்றன. இதன்காரணமாக இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 105.19 புள்ளிகள் சரிந்து 26,331.83-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 16.40 புள்ளிகள் உயர்ந்து 7,889.90-ஆகவும் இருந்த நிலையில் சென்செக்ஸ் மட்டும் சற்று நேரத்தில் சரிவிலிருந்து மீண்டது. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் 17 புள்ளிகள் உயர்ந்தும், நிப்டி தொடர்ந்து 7 புள்ளிகள் சரிந்தும் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|