ஓணம் பண்­டிகை எதி­ரொலி: தமி­ழக பட்டு வேட்டி, சேலை­க­ளுக்கு கிராக்கிஓணம் பண்­டிகை எதி­ரொலி: தமி­ழக பட்டு வேட்டி, சேலை­க­ளுக்கு கிராக்கி ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.47 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.47 ...
‘பாசு­மதி அரிசி பயி­ரிடும் பரப்பு 40 சத­வீதம் உயரும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2014
07:16

புது­டில்லி:நடப்பு கரீப் பரு­வத்தில், பாசு­மதி அரிசி பயி­ரிடும் மொத்த பரப்­ப­ளவு, 40 சத­வீதம் அதி­க­ரித்து, 35 லட்சம் ஹெக்­டே­ராக உயரும் என, மத்­திய வேளாண் ஆணையர் ஜே.எஸ்.சாந்து தெரி­வித்தார்.கடந்­தாண்டு, இதே பரு­வத்தில், பாசு­மதி அரிசி பயி­ரிடும் பரப்பு, 25 லட்சம் ஹெக்­டே­ராக இருந்­தது என்­பது, குறிப்­பி­டத்­தக்­கது.
ராஜஸ்தான்:குறிப்­பாக, பாசு­மதி அரிசி உற்­பத்­தியில் சிறந்து விளங்கும், பஞ்சாப், அரி­யானா, உத்­த­ரகாண்ட், இமாச்சல் பிர­தேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநி­லங்கள் தவிர்த்து, பாரம்­ப­ரியம் அல்­லாத புதிய பகு­தி­க­ளான, மத்­திய பிர­தேசம் மற்றும் ராஜஸ்தான் மாநி­லங்­க­ளிலும், பாசு­மதி அரிசி உற்­பத்தி சிறப்­பான அளவில் இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.நல்ல வரு­மா­னத்தை எதிர்­பார்த்து, விவ­சா­யிகள், உயர்­வகை நெல் சாகு­ப­டியில் அதிக கவனம் செலுத்தி வரு­கின்­றனர்.பெரும்­பா­லான விவ­சா­யிகள், புசா 1501 மற்றும் புசா 1121 பாசு­மதி அரிசி வகை­களை பயி­ரிட்டு உள்­ளனர். கடந்­தாண்டில், இவ்­வகை அரி­சிக்கு நல்ல விலை கிடைத்­தது.மதிப்­பீட்டின் படி, நெல் பயி­ரிடும் பரப்பு இலக்கு எட்­டப்­படும் நிலையில், நடப்­பாண்டில் மொத்த பாசு­மதி அரிசி உற்­பத்தி, 87.50 லட்சம் டன்னை எட்ட வாய்ப்­புள்­ளது. இதன்­படி ஒரு ஹெக்­டே­ருக்­கான சரா­சரி விளைச்சல், 2.5 டன் என்ற அளவில் இருக்கும்.கரீப் பருவம்:கடந்­தாண்டில், பாசு­மதி அரிசி உற்­பத்தி, 62.50 லட்சம் டன்­னா­கவும், இதன் ஏற்­று­மதி, 70 லட்சம் டன்­னா­கவும் இருந்­தது என, சாந்து மேலும் தெரி­வித்தார்.
நடப்பு கரீப்­ப­ரு­வத்தில், இது­வ­ரை­யி­லு­மாக, பாசு­மதி அரிசி உட்­பட அனைத்து வகையான நெல் சாகுபடி பரப்பு, 3.35 கோடி ஹெக்­டே­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்­தாண்டின் இதே காலத்தில், 3.34 கோடி ஹெக்­டே­ராக இருந்­தது என, மத்­திய அரசின் புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.நாட்டின் 90 சத­வீத அரிசி உற்­பத்தி, கரீப் பரு­வத்தில் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.கரீப் பருவம் என்­பது, ஒவ்­வொரு ஆண்டும் தென்­மேற்கு பரு­வ­ம­ழை­யை­யொட்டி, ஜூன் மாதம் முதற்­கொண்டு துவங்­கு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)