பதிவு செய்த நாள்
27 ஆக2014
07:16
புதுடில்லி:நடப்பு கரீப் பருவத்தில், பாசுமதி அரிசி பயிரிடும் மொத்த பரப்பளவு, 40 சதவீதம் அதிகரித்து, 35 லட்சம் ஹெக்டேராக உயரும் என, மத்திய வேளாண் ஆணையர் ஜே.எஸ்.சாந்து தெரிவித்தார்.கடந்தாண்டு, இதே பருவத்தில், பாசுமதி அரிசி பயிரிடும் பரப்பு, 25 லட்சம் ஹெக்டேராக இருந்தது என்பது, குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தான்:குறிப்பாக, பாசுமதி அரிசி உற்பத்தியில் சிறந்து விளங்கும், பஞ்சாப், அரியானா, உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் தவிர்த்து, பாரம்பரியம் அல்லாத புதிய பகுதிகளான, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களிலும், பாசுமதி அரிசி உற்பத்தி சிறப்பான அளவில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.நல்ல வருமானத்தை எதிர்பார்த்து, விவசாயிகள், உயர்வகை நெல் சாகுபடியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.பெரும்பாலான விவசாயிகள், புசா 1501 மற்றும் புசா 1121 பாசுமதி அரிசி வகைகளை பயிரிட்டு உள்ளனர். கடந்தாண்டில், இவ்வகை அரிசிக்கு நல்ல விலை கிடைத்தது.மதிப்பீட்டின் படி, நெல் பயிரிடும் பரப்பு இலக்கு எட்டப்படும் நிலையில், நடப்பாண்டில் மொத்த பாசுமதி அரிசி உற்பத்தி, 87.50 லட்சம் டன்னை எட்ட வாய்ப்புள்ளது. இதன்படி ஒரு ஹெக்டேருக்கான சராசரி விளைச்சல், 2.5 டன் என்ற அளவில் இருக்கும்.கரீப் பருவம்:கடந்தாண்டில், பாசுமதி அரிசி உற்பத்தி, 62.50 லட்சம் டன்னாகவும், இதன் ஏற்றுமதி, 70 லட்சம் டன்னாகவும் இருந்தது என, சாந்து மேலும் தெரிவித்தார்.
நடப்பு கரீப்பருவத்தில், இதுவரையிலுமாக, பாசுமதி அரிசி உட்பட அனைத்து வகையான நெல் சாகுபடி பரப்பு, 3.35 கோடி ஹெக்டேராக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 3.34 கோடி ஹெக்டேராக இருந்தது என, மத்திய அரசின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.நாட்டின் 90 சதவீத அரிசி உற்பத்தி, கரீப் பருவத்தில் மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.கரீப் பருவம் என்பது, ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழையையொட்டி, ஜூன் மாதம் முதற்கொண்டு துவங்குகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|