பதிவு செய்த நாள்
28 ஆக2014
00:42
புனே :நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், (ஏப்., – ஜூன்), உள்நாட்டில் ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் விற்பனை, முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் (20.6 லட்சம்), 23.6 சதவீதம் அதிகரித்து, 25.50 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது என, ஐ.டீ.சி., ஆய்வு நிறுவனம் தெரிவித்துள் ளது.
கடந்தாண்டின் இரண்டாவது காலாண்டில், 35.30 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப் பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், கணக்கீட்டு காலாண்டில், இதன் விற்பனை, 27.8 சதவீதம் குறைந்துள்ளது.முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், வர்த்தக நிறுவனங்களுக்கான கம்ப்யூட்டர் விற்பனை, இரண்டாவது காலாண்டில், 34.5 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே போன்று, தனிநபர் பயன்பாட்டிற்கான கம்ப்யூட்டர் விற்பனையும், 12.8 சதவீதம் வளர்ச்சி கண்டு, 11.60 லட்சமாக உயர்ந்துள்ளது. கணக்கீட்டு காலாண்டில், ஒட்டுமொத்த கம்ப்யூட்டர் விற்பனையில், எச்.பி., நிறுவனம், 29.5 சதவீத சந்தை பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது.இதையடுத்து, டெல் (19.1 சதவீதம்), லெனோவா (13.9 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன என, ஐ.டீ.சி., மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தையில் புதுசு செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|