விமான சேவை குறைபாடு  புகார்கள் குறைந்ததுவிமான சேவை குறைபாடு புகார்கள் குறைந்தது ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.49 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.49 ...
தேயிலைக்கு மவுசு குறைவால் ரூ.77 கோடிக்கு வருவாய் இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
02:39

ஊட்டி:வெளிநாடுகளில், நீலகிரி தேயிலைக்கு மவுசு குறைந்ததால், கடந்த ஏழு மாதத்தில், 77 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான்: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள், உள்நாட்டு தேவை போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே, நீலகிரி தேயிலைக்கான ஏற்றுமதி வர்த்தகம் விறுவிறுப்பாக இல்லை.
பாகிஸ்தான், ரஷ்யாவை தவிர, பிற நாடுகள் நீலகிரி தேயிலை துாளை வாங்குவதில்லை. இதனால் தேயிலை வர்த்தகத்தில் பலத்த அடி விழுந்துள்ளது.இதுகுறித்து, சர்வதேச நிர்வாக வியல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:
நடப்பாண்டின், முதல் ஏழு மாதத்தில் நடந்த, 30 தேயிலை ஏலங்களில், 3.26 கோடி கிலோ தேயிலை துாள் விற்பனையானது. கடந்தாண்டின், இதே காலத்தில், 3.43 கோடி கிலோ தேயிலை துாள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்தாண்டை விட வரத்து குறைந்த போதிலும், தேயிலை விலை உயரவில்லை. நடப்பாண்டு ஏலத்தில் விற்கப்பட்ட தேயிலை துாளின் சராசரி விலை, கிலோவுக்கு, 77.59 ரூபாயாக இருந்தது.இது, கடந்தாண்டு கிலோவுக்கு, 96.10 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. மதிப்பீட்டு காலத்தில், தேயிலை வர்த்தகம், 23.26 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 329.62 கோடியிலிருந்து, 252.94 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில், தேயிலை வர்த்தகத்தின் மூலம், 76.68 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
சிக்கல்:நீலகிரி தேயிலை தொழிற்சாலைகள், குடோன்களில் தேயிலை துாளை தேக்கி வைத்து, ஏலத்தில் விற்பனை செய்கின்றன.சில மாதங்களாக, தேயிலை துாள் அதிகளவில் தேக்கமடைந்து வருவதால், குடோன்கள் நிரம்பி வழிகின்றன.
அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளால், மேற்கொண்டு தேயிலை துாளை குடோன்களுக்கு கொண்டு வர வேண்டாம்’ என, குடோன் உரிமையாளர்கள், ‘நோட்டீஸ்’ அனுப்பி வருகின்றனர். இது, தொழிற்சாலைகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி தேயிலை தொழிலில், இதுபோன்ற பிரச்னைகள் தொடரும் பட்சத்தில், இத்தொழில் சார்ந்த அனைவரும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)