பதிவு செய்த நாள்
28 ஆக2014
02:39
ஊட்டி:வெளிநாடுகளில், நீலகிரி தேயிலைக்கு மவுசு குறைந்ததால், கடந்த ஏழு மாதத்தில், 77 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக, வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான்: நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகும் தேயிலை துாள், உள்நாட்டு தேவை போக வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டு துவக்கத்தில் இருந்தே, நீலகிரி தேயிலைக்கான ஏற்றுமதி வர்த்தகம் விறுவிறுப்பாக இல்லை.
பாகிஸ்தான், ரஷ்யாவை தவிர, பிற நாடுகள் நீலகிரி தேயிலை துாளை வாங்குவதில்லை. இதனால் தேயிலை வர்த்தகத்தில் பலத்த அடி விழுந்துள்ளது.இதுகுறித்து, சர்வதேச நிர்வாக வியல் ஆலோசகர் சுந்தர் கூறியதாவது:
நடப்பாண்டின், முதல் ஏழு மாதத்தில் நடந்த, 30 தேயிலை ஏலங்களில், 3.26 கோடி கிலோ தேயிலை துாள் விற்பனையானது. கடந்தாண்டின், இதே காலத்தில், 3.43 கோடி கிலோ தேயிலை துாள் விற்பனை செய்யப்பட்டது.
கடந்தாண்டை விட வரத்து குறைந்த போதிலும், தேயிலை விலை உயரவில்லை. நடப்பாண்டு ஏலத்தில் விற்கப்பட்ட தேயிலை துாளின் சராசரி விலை, கிலோவுக்கு, 77.59 ரூபாயாக இருந்தது.இது, கடந்தாண்டு கிலோவுக்கு, 96.10 ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. மதிப்பீட்டு காலத்தில், தேயிலை வர்த்தகம், 23.26 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 329.62 கோடியிலிருந்து, 252.94 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது.ஆக, கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டில், தேயிலை வர்த்தகத்தின் மூலம், 76.68 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
சிக்கல்:நீலகிரி தேயிலை தொழிற்சாலைகள், குடோன்களில் தேயிலை துாளை தேக்கி வைத்து, ஏலத்தில் விற்பனை செய்கின்றன.சில மாதங்களாக, தேயிலை துாள் அதிகளவில் தேக்கமடைந்து வருவதால், குடோன்கள் நிரம்பி வழிகின்றன.
அவ்வப்போது ஏற்படும் இதுபோன்ற நிகழ்வுகளால், மேற்கொண்டு தேயிலை துாளை குடோன்களுக்கு கொண்டு வர வேண்டாம்’ என, குடோன் உரிமையாளர்கள், ‘நோட்டீஸ்’ அனுப்பி வருகின்றனர். இது, தொழிற்சாலைகளுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி தேயிலை தொழிலில், இதுபோன்ற பிரச்னைகள் தொடரும் பட்சத்தில், இத்தொழில் சார்ந்த அனைவரும் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|