ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.49ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.60.49 ... தங்கம் விலை ரூ.88 உயர்வு தங்கம் விலை ரூ.88 உயர்வு ...
மாதம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு நீக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2014
10:09

புதுடில்லி: 'மாதம் ஒரு சிலிண்டர் தான் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது' என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால், மாதம் ஒரு சிலிண்டர் வாங்க வேண்டிய கட்டாயம் இல்லை. தேவைப்பட்டால், கூடுதலாக ஒரே மாதத்தில் சிலிண்டர்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வீடுகளுக்கு சமையல் காஸ் சிலிண்டர்கள், மானிய விலையில் வழங்கப்படுவதால், அரசுக்கு மானியச் சுமை அதிகரிக்கிறது என தெரிவித்து, 'ஆண்டுக்கு, ஒன்பது சிலிண்டர் தான் மானிய விலையில் கிடைக்கும்; தேவைப்பட்டால், கூடுதல் விலை கொடுத்து எத்தனை சிலிண்டர் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்' என, முந்தைய மன்மோகன் சிங் அரசு அறிவித்தது.அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, கடந்த பிப்ரவரியில், 'ஆண்டுக்கு, 12 சிலிண்டர், மானிய விலையில் வழங்கப்படும்' என, அரசு அறிவித்தது. இதன் படி, ஒவ்வொரு மாதமும் ஒரு சிலிண்டர் பெற்றுக் கொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டது.
இதை நேற்று, மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. 'ஒரு மாதத்திற்கு ஒரு சிலிண்டர் தான் என்றில்லை; தேவைப்பட்டால், ஒரே மாதத்தில் ஒன்றிரண்டு சிலிண்டர் கூட பெற்றுக் கொள்ளலாம். எனினும், ஆண்டுக்கு, 12 சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்' என, அறிவித்துள்ளது.
பிரதமர், நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த, மத்திய அமைச்சர், ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது: பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் முந்தைய முறை மாற்றியமைக்கப்படுகிறது. சில நேரங்களில் கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்படும். குறிப்பாக, பண்டிகை காலங்களில் கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்படும் போது வழங்க முடியாத நிலை இருந்தது.இதை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)