பதிவு செய்த நாள்
30 ஆக2014
02:45
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 3.28 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, முழு நிதியாண்டிற்கான பட்ஜெட் மதிப்பீட்டில், 61.2 சதவீதமாகும்.
கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், நிதி பற்றாக்குறை, பட்ஜெட் மதிப்பீட்டில், 62.8 சதவீதமாக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், மத்திய அரசின் செலவினம், 5.03 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, முழு நிதியாண்டிற்கான மதிப்பீட்டில், 28.1 சதவீதமாகும்.மேற்கண்ட மொத்த செலவினத்தில், திட்டமிட்ட செலவினம், 1.32 லட்சம் கோடியாகவும், திட்டமிடப்படா செலவினம், 3.71 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளன.
இதே காலத்தில், வருவாய் வசூல், 1.75 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டில், 14.8 சதவீதமாகும்.கணக்கீட்டு காலத்தில், வருவாய் பற்றாக்குறை, 2.66 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, பட்ஜெட் மதிப்பீட்டில், 70.4 சதவீதமாகும்.கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, 5.08 லட்சம் கோடி ரூபாய் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டீ.பி.,), 4.5 சதவீதம் என்றளவில் இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில், 4.9 சதவீதமாக அதிகரித்து காணப்பட்டது.
நடப்பு நிதியாண்டில், நிதி பற்றாக்குறை, 5.31 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இது, ஜி.டீ.பி.,யில், 4.1 சதவீதமாகும்.இதை, வரும் 2016 – 17ம் நிதியாண்டிற்குள், 3 சதவீதமாக குறைக்க, மத்திய அரசு, இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|