பதிவு செய்த நாள்
31 ஆக2014
00:36

புதுடில்லி:சென்ற ஜூலை மாத இறுதி நிலவரப்படி, பங்கு சந்தை முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை, 2.22 கோடியாக அதிகரித்து உள்ளது.இது, கடந்தாண்டு ஜூலை நிலவரப்படி, 2.13 கோடியாக இருந்தது. ஆக, ஓராண்டு காலத்தில், 9 லட்சம் டீமேட் கணக்குகள், புதிதாக துவக்கப்பட்டுள்ளன.என்.எஸ்.டீ.எல்., மற்றும் சி.டீ.எஸ்.எல்., ஆகிய இரண்டு டிபாசிட்டரி நிறுவனங்கள், முதலீட்டாளர்களின் டீமேட் கணக்குகளை நிர்வகித்து வருகின்றன.இவை, முதலீட்டாளர்களின் பங்குகள், கடன்பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை, மின்ணணு வடிவில் பராமரித்து வருகின்றன.
ஜூலை மாத இறுதி நிலவரப்படி, என்.எஸ்.டீ.எல்., மற்றும் சி.எஸ்.டீ.எல்., ஆகிய இரு நிறுவனங்களின் டீமேட் கணக்குகள் முறையே, 1.32 கோடி மற்றும் 89.75 லட்சமாக உள்ளன.இவை, கடந்தாண்டின் இதே மாத நிலவரப்படி முறையே, 1.28 கோடி மற்றும் 84.70 லட்சமாக இருந்தது. மேற்கண்ட இரண்டு நிறுவனங்களிடம், மின்ணணு வடிவில் உள்ள முதலீட்டு ஆவணங்களின் மொத்த மதிப்பு, 116 லட்சம் கோடி ரூபாய். இது, கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 62 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|