பதிவு செய்த நாள்
01 செப்2014
00:52
கூடலுார்;ரப்பர் இறக்குமதி அதிகரித்துள்ளதால், அதன் விலை தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இதனால், ரப்பர் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் உள்ளிட்ட பல பகுதிகளில், தேயிலை தோட்டங்களின் நடுவே, ரப்பர் மரங்களை ஊடுபயிராக வளர்த்து, விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதன் மூலம் கிடைக்கும் ரப்பரை, கேரளா உட்பட பிற இடங்களுக்கு அனுப்பி, விவசாயிகள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டில், ஒரு கிலோ ரப்பருக்கு, 240 ரூபாய் வரை விலை கிடைத்தது. ஆனால், தற்போது, இறக்குமதி அதிகரித்துள்ளதன் காரணமாக, ஒரு கிலோ ரப்பரின் விலை, 130 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.இதனால், ரப்பருக்கு போதிய விலை கிடைக்காமல், விவசாயிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக, ரப்பர் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் மேலும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, விவசாயி ஒருவர் கூறியதாவது:இறக்குமதி அதிகரிப்பால், உள்நாட்டு ரப்பர் விலை சரிவடைந்து வருகிறது. அடுத்த மாதம், ரப்பர் இறக்குமதி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.எனவே, மத்திய அரசு, இத்துறை சார்ந்த விவசாயிகளின் நலன் கருதி, இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில், உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|