பதிவு செய்த நாள்
01 செப்2014
00:53
புதுடில்லி;மத்தியில் அமைந்துள்ள புதிய அரசு, நாட்டின் உள்கட்டமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில், கொள்கை திட்டங்களை வகுத்துள்ளது. இவை, நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.அடிப்படை கட்டமைப்பு துறை விரிவாக்க நடவடிக்கைகளில் ஏற்பட்ட சுணக்க நிலையால், சென்ற நிதியாண்டில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு, 0.6 சதவீதம் மட்டுமே உயர்ந்து, 7.39 கோடி டன்னாக உள்ளது.
இது, நான்கு ஆண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும். இந்நிலையில், மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு, பட்ஜெட்டில், உள்கட்டமைப்பு துறையை மேம்படுத்தும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு, மத்திய அரசின் செலவினங்கள் சூடுபிடிக்கும் பட்சத்தில், இந்தியாவின் உருக்கு பயன்பாடு சிறப்பான அளவில் அதிகரிக்கும்.சீனாவில், வீட்டு கட்டுமான துறை நடவடிக்கைகள் சுணக்கம் கண்டுள்ளதையடுத்து, கடந்தாண்டில், 9 சதவீதமாக இருந்த உருக்கு பயன்பாட்டு வளர்ச்சி, நடப்பாண்டில், 3 சதவீதமாக குறையும் என, மூடீஸ் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|