பதிவு செய்த நாள்
01 செப்2014
00:54
புதுடில்லி;நடப்பாண்டு, கரீப் பருவ சாகுபடி ஏறக்குறைய முடிவடைந்து விட்டது. பருவமழை குறைவால், இப்பருவத்தில், நெல், பருப்பு வகைகள் உள்ளிட்டவற்றின் சாகுபடி பரப்பு, 9.66 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது.அதிகரிப்பு;கடந்தாண்டின் இதே பருவத்தில், இவற்றின் சாகுபடி பரப்பு, 9.99 கோடி ஹெக்டேராக அதிகரித்திருந்தது என, மத்திய வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக, பருப்பு, எண்ணெய் வித்துக்கள், உணவு தானியங்கள், பருத்தி, சர்க்கரை மற்றும் சணல் ஆகியவை பயிரிடும் பணிகள் நிறைவடைந்துள்ளன.
அதேசமயம், நெல் பயிரிடும் பணி அடுத்த மாதத்துடன் நிறைவடைய உள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், நெல், பருத்தி ஆகியவற்றின் பயிரிடும் பரப்பு, நடப்பாண்டில் அதிகரித்துள்ளது என, வேளாண் ஆணையர் ஜே.எஸ்.சாந்து தெரிவித்தார்.பருவமழை பொழிவு மேம்பட்டு வருவதையடுத்து, நடப்பாண்டு கரீப் பருவத்தில், நெல் பயிரிடும் பரப்பு, 3.49 கோடி ஹெக்டேரிலிருந்து, 3.50 கோடி ஹெக்டேராக மிதமான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.அதேசமயம், பருத்தி பயிரிடும் பரப்பு, 1.11 கோடி ஹெக்டேரிலிருந்து, 1.22 கோடி ஹெக்டேராக சிறப்பாக உயர்ந்துள்ளது.இருப்பினும், பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பு, 1 கோடி ஹெக்டேரிலிருந்து, 95 லட்சம் ஹெக்டேராக குறைந்து உள்ளது.
சரிவு;இதே போன்று, எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பும், 1.86 கோடி ஹெக்டேரிலிருந்து, 1.72 கோடி ஹெக்டேராக சரிவடைந்துள்ளது.உள்நாட்டில், பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு சரிவடைந்துள்ளதை அடுத்து, இவற்றின் இறக்குமதி, குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், முக்கிய உணவு தானியங்கள் சாகுபடி பரப்பளவும், 1.90 கோடி ஹெக்டேரிலிருந்து, 1.70 கோடி ஹெக்டேராக குறைந்துள்ளது.
இதே போன்று, கரும்பு பயிரிடும் பரப்பும், 50 லட்சம் ஹெக்டேரிலிருந்து, 47 லட்சம் ஹெக்டேராக வீழ்ச்சி கண்டுள்ளது என, வேளாண் அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென்மேற்கு பருவமழையை அடிப்படையாக கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதற்கொண்டு கரீப் பருவம் துவங்குகிறது. இப்பருவ பயிர்களின் அறுவடை பணிகள், அக்டோபரிலிருந்து மேற்கொள்ளப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|