பதிவு செய்த நாள்
01 செப்2014
17:33
மும்பை : வாரத்தின் துவக்கநாளில் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. அதிலும் சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டது. நிப்டி முதன்முறையாக 8 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்தது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.7 சதவீதமாக உயர்ந்தது. இதன்வெளிப்பாடாக முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை வாங்க தொடங்கினர். இதனால் முக்கிய நிறுவன பங்குகள் உயர்ந்ததோடு பங்குவர்த்தகம் விறுவிறுப்படைந்தது. இதனால் நாள் முழுக்க பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 229.44 புள்ளிகள் உயர்ந்து 28,867.55 எனும் புதிய உச்சத்தையும், நிப்டி 73.35 புள்ளிகள் உயர்ந்து 8,027.70 எனும் சாதனையையும் படைத்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஹீரோ மோட்டோ கார்ப், மாருதி சுசூகி நிறுவன பங்குகள் அதிக ஏற்றம் கண்டன. இவைகள் தவிர்த்து எல் அண்ட் டி., ஹிண்டால்கோ, ஓஎன்ஜிசி., கெயில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சிப்லா, கோல் இந்தியா, டாடா பவர் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவன பங்குகளும் ஏற்றம் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|